அவர்களின் உலகம் – கவிதை
2007 ஜனவரி 17
அவர்களின் உலகம்
மாமா வாங்கி வந்த
வெளிநாட்டு பொம்மை காரினை
அட்டை பிரித்து
மகனின் கண்ணில் படாமல்
பத்திரப்படுத்தினார் அப்பா..
வெறும் அட்டையினை கொண்டே
காராகவும்
பேருந்தாகவும்
அதுவாகவும்
இதுவாகவும் என்றெண்ணி
சலிக்காமல் விளையாடியது குழந்தை
–
விழியன்
super
ம்ஹ்ம்… ஏதோ விடுபட்டது போல் இருக்கு தலை..
சொல்ல வந்த கருத்து நல்லாயிருக்கு.. ஆனால் முழுமையடையவில்லையோ என்று தோன்றுகிறதெனக்கு!
நன்றி சென்ஷி..
நன்றி ராகவன்..
அருமையா சொல்லிருக்கீங்க விழியன்.
பத்திரப்படுத்தினார் ..
அப்பா/அம்மா/தாத்தா – என்று பலரை உண்மையில் பார்த்திருக்கிறேன், உங்களைப் போலவே:)