மடை திறந்த வெல்லம்.. (கவிதை)
2007 மார்ச் 21
மடை திறந்த வெல்லம்..
பந்தை விரட்டி மகிழ்ந்த சிறுமி
புல் தடுக்கியோ கல் தடுக்கியோ
தொப்பென விழந்து..
தூசி துடைத்து எழுந்து சென்றாள்.
சுற்றும் முற்றும் யாருமில்லையென..
அரை மணி தாமதத்தின் பின்
அம்மா அவதரிப்பில்
சட்டென மடை திறந்தது
சத்தமிட்டு அழுதாள்
“என்னாச்சு?”
“விழுந்துட்டேன்மா”
“அச்சோ..வலிக்குதா குழந்தைக்கு?”
“அப்ப வலிச்சுது”
சின்ன வெல்லத்தின் கண்வழியே
பெருவெள்ளம்..
–
விழியன்
Amma aravanaipil? or avatharipil?
“அவதரிப்பில்” தான்.
எங்கோ சென்றிருந்த அம்மா, அரை மணி நேரம் பிறகு வருகின்றாள்..
Its nice one….!
Good One
இயற்கையான நிகழ்வு அருமையான கவிதை வாழ்த்துகள்.
வர வர குழந்தையாவே நீங்க மாறிட்டு வர்றீங்க..
நல்லாயிருக்கு தலை.. இயல்பான , மறுக்க முடியாத சிந்தனை…