த.மு.எ.ச சிறுகதை போட்டி அறிவிப்பு

2007 மார்ச் 22
by vizhiyan

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் ‘கந்தர்வன் நினைவு சிறுகதைப்போட்டி’! -நா. முத்துநிலவன் -

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவரும், மாபெரும் எழுத்தாளரும், இங்கு எங்களுடன் பல்லாண்டுகள் வாழ்ந்து இரண்டாண்டுக்கு முன் மறைந்தவருமான கவிஞர் கந்தர்வன் அவர்களின் நினைவாக ஒரு பெரும் சிறுகதைப்போட்டியை நடத்திடத் திட்டமிட்டிருக்கிறோம்.

ஒருவரே எத்தனை கதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். 2007-ஏப்ரல்-20ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பவேண்டும்.
படைப்பாளியின் சொந்தக் கற்பனையாகவும் எதிலும் வெளிவராததாகவும் இருக்கவேண்டும். பக்க, உள்ளடக்க வரையறை இல்லை. நடுவர் குழுவால் தேர்வு பெற்ற கதைகள், நூலாக வெளியிடப்படும். புதுக்கோட்டையில் நிகழும் வண்ணமிகு விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

முதல் பரிசு ரூ.5,000
இரண்டாம் பரிசு ரூ.3,000
மூன்றாம் பரிசு ரூ.2.000

கதைகளை அனுப்ப அஞ்சல்/மின்னஞ்சல் முகவரி:

நா.முத்து நிலவன்,
(மாநிலத் துணைப் பொதுச்செயலர்-தமுஎச),
96, சீனிவாச நகர் 3ஆம் தெரு,
மச்சுவாடி – அஞ்சல்,
புதுக்கோட்டை-622 004 – தமிழ் நாடு.
மின்னஞ்சல்:naamuthunilavan@yahoo.co.in
செல்பேசி: 94431-93293.

இவண்:
அருணன், ச.தமிழ்ச்செல்வன்,
மாநிலத்தலைவர். மாநிலப் பொதுச்செயலர்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்,
மாநிலக்குழு.57/11-மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி-
மதுரை-625001

தகவல்: நா. முத்துநிலவன்

3 பதில்கள் leave one →
  1. 2007 மார்ச் 22

    Thank You My dear Viziyan.
    viziyan enum peyar ungaLukkup porutham thaan! ungal ‘vizi’ ulaga vizi enpathai, ungal viziyaal ulagathaip paarththup purinthukoNDEn. nanRi.

  2. 2007 மார்ச் 23

    தகவலுக்கு நன்றி விழியன்..

    போட்டி சிறப்பான முறையில் நடக்க என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்..

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS