விழியன் பக்கம்

மார்ச் 21, 2008

குழந்தை(பருவம்) - கவிதை

கோப்பு வகை: Kavithai, கவிதை — vizhiyan @ 8:52 நான்
குழந்தை(பருவம்)
உன் பூனையும் என் புறாவும்
சண்டை போட்டதன் பின் திட்டியதற்கா?
கேரம் போர்டில் தோற்றுப்போனதற்காய்
கலைத்துவிட்டு மொண்டியடித்து ஓடிவிட்டதற்கா?
மாமா கொடுத்த பம்பர கயிறை
நான் மறைவாய் ஒளித்து வைத்தற்கா?
எதற்கு உம்மென இருக்கிறாய்
சாரி அக்கா
ஓரமாகவே உட்கார்ந்து என்ன தான் செய்கிறாய்?
நான்  உன்னிடம் ஏன் வரக்கூடாது?
அக்கா என்னுடன் விளையாட வருவியா?
- விழியன்

1 மறுமொழி »

  1. அழகான வரிகள் கலக்குற மச்சி

    மறுமொழி ஆல் அடலேறு — மார்ச் 22, 2008 @ 4:36 நான்

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.