ஈ(ர)ழத்துளிகள்

2009 மே 25
by vizhiyan

ஈ(ர)ழத்துளிகள்

 பதுங்கியிரு இப்பதுகுழியில்

அப்பா வந்தாலும் வருவேன்

________________________________________

கணக்குப் பாடம்

ஒன்று

இரண்டு

மூனு

நாலு

அம்மா மொத்தம் நாலு குண்டுகள்

உன் மீது?

 ________________________________________

 மழை வேண்டாமென வேண்டும்

விசித்திர மனிதர்கள் நாங்கள்..

குண்டுமழை வேண்டாமென வேண்டும்

மனிதர்கள் நாங்கள்.

சில சமயம் சந்தேகம் வலுக்கின்றது

நாங்கள் மனிதர்கள் தானா?

 ________________________________________

 அப்பா எனக்கு

பேய் பூதம் பிசாசு என

வரைந்தேதும் காட்டியதில்லை

நேரில் நிறைய பார்த்ததுண்டு

 ________________________________________

 இயலாமையின் உச்சத்தில்

வழிவதெல்லாம் மெளனம் தான்

அழுவதற்கும் சக்தியெல்லாம்

என்றோ போய்விட்டது

 ________________________________________

ஆற்றின் நிறமென்னவென கேட்டதற்கு

சிகப்பு என்கின்றான்.

என்னிடம் இனி கேள்வியில்லை.

 

- விழியன்

9 பதில்கள் leave one →
  1. 2009 மே 25

    kanneer varavalaikum kanakkup paadam

  2. 2009 மே 25
    vidya permalink

    we are shameless people…

  3. 2009 மே 25

    வருத்தங்களும், கையறுநிலையும் மாறி மாறி கொல்கின்றன….

  4. 2009 மே 25
    Jamuna permalink

    நிகழ்ந்ததை நினைத்து
    வருத்தத்தை விட
    நிகழப்போவதை நினைத்தே
    மனம் வலி கொள்கிறது
    அவர்கள் தமிழர்களென்று
    தலைவர்கள் கூவுகிறார்கள்
    அவர்கள் மனிதர்களென்று
    யார் வாடுகிறார்

  5. 2009 மே 25

    \\இயலாமையின் உச்சத்தில்

    வழிவதெல்லாம் மெளனம் தான்

    அழுவதற்கும் சக்தியெல்லாம்

    என்றோ போய்விட்டது
    \\

    :(

  6. 2009 மே 26

    Too good.

  7. 2009 மே 26
    Ramkumar permalink

    6.5 kodi makkal vaazhum Thamizhnadu endru solvadharkku naa koosukiradhu….125 kodi makkal vaazhum India endru solvadharku en udambe koosukiradhu.

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS