குழலியால்..(4)

2009 ஜூலை 1
குறிச்சொற்கள்: ,
by vizhiyan

அமுதப்பார்வை

தனித்துவிடப்பட்ட மாலைப்பொழுதில்
சந்தனம் தெளித்தாள் மகளவள்
துணியெடுத்து துடைத்தேன்
சத்தம்போடாமல் சுத்தமிட்டேன்
இல்லாள் அறை நுழைந்த சமயம்
“பார் நான் என்னெல்லாம் செய்கிறேன்”
பெருமிதத்தேன் என் செய்கைக்கு
பார்வையால் காட்டிய திசையில்
மலையளவு அழுக்குத் துணிகள்

விழியன்

இதுவரை மறுமொழிகள் இல்லை

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS