நிறைவேறிய பயணம் – கவிதை
2009 அக்டோபர் 11
நிறைவேறிய பயணம்
சில நூறு மையில்கள் கடந்து
நண்பனவன் மனம் குளிர
மணமதனை காண விழைந்தேன்.
வியர்வையின் நறுமண குளியலில் பயணம்.
கொசுவின் ரீக்காரமுடன் அறையில் உறக்கம்
சொக்கும் கண்களுடன் முதல்வரிசையில் இடம்
சடங்குகளின் போர்வைக்குள் மணமக்கள்
மாங்கல்யம் அணியும் பொழுது
மனமார ஆசீர்வதிக்க மகிழ்கையில்
புகைப்படகாரர்களின் பின்புறம் பார்த்தபடி
இனிதே நிறைவுற்றது பயணம்.
–
விழியன்