<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>விழியன் பக்கம் &#187; கடிதம்</title>
	<atom:link href="http://vizhiyan.wordpress.com/category/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://vizhiyan.wordpress.com</link>
	<description>வரம்பு மீறும் இளைஞனின் எண்ணங்கள்...</description>
	<lastBuildDate>Mon, 21 Dec 2009 18:51:41 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.com/</generator>
	<language>ta</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<cloud domain='vizhiyan.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://www.gravatar.com/blavatar/f3e6e0b72ba679a72fc93dc465eccae3?s=96&#038;d=http://s.wordpress.com/i/buttonw-com.png</url>
		<title>விழியன் பக்கம் &#187; கடிதம்</title>
		<link>http://vizhiyan.wordpress.com</link>
	</image>
	<atom:link rel="search" type="application/opensearchdescription+xml" href="http://vizhiyan.wordpress.com/osd.xml" title="விழியன் பக்கம்" />
		<item>
		<title>Karuvariye Kallaraiyaga..</title>
		<link>http://vizhiyan.wordpress.com/2006/07/06/karuvariye-kallaraiyaga/</link>
		<comments>http://vizhiyan.wordpress.com/2006/07/06/karuvariye-kallaraiyaga/#comments</comments>
		<pubDate>Thu, 06 Jul 2006 10:46:34 +0000</pubDate>
		<dc:creator>vizhiyan</dc:creator>
				<category><![CDATA[கடிதம்]]></category>

		<guid isPermaLink="false">https://vizhiyan.wordpress.com/2006/07/06/karuvariye-kallaraiyaga/</guid>
		<description><![CDATA[கருவறையே கல்லறையாக..
அய் ஜாலி,இன்னும் ஒரு மாதத்தில் இந்த அழகிய உலகை காண குட்டிகரணம் அடித்து வெளி  வரப்போகிறேன். எட்டு மாசமாகி என் அம்மா வயிற்றிலேயே இருக்கிறேன். எத்தனை பாசமானவள்  என் தாய், அட எல்லா தாயும் தான். நான் உள்ளே இருக்கும் போதே இத்தனை கனிவாக, பாசமாக  பார்த்துக்கொள்கிறாளே இன்னும் நான் வெளியே வந்து தவழ்ந்து, சிரித்து, அழுது, பேசி,  ஆடி,பாடி, ஓடி விளையாட ஆரம்பித்துவிட்டால். அம்மாடி எத்தனை பூரிப்பாள் இவள்.
இன்னும் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vizhiyan.wordpress.com&blog=113865&post=99&subd=vizhiyan&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><b>கருவறையே கல்லறையாக..</b></p>
<p>அய் ஜாலி,இன்னும் ஒரு மாதத்தில் இந்த அழகிய உலகை காண குட்டிகரணம் அடித்து வெளி  வரப்போகிறேன். எட்டு மாசமாகி என் அம்மா வயிற்றிலேயே இருக்கிறேன். எத்தனை பாசமானவள்  என் தாய், அட எல்லா தாயும் தான். நான் உள்ளே இருக்கும் போதே இத்தனை கனிவாக, பாசமாக  பார்த்துக்கொள்கிறாளே இன்னும் நான் வெளியே வந்து தவழ்ந்து, சிரித்து, அழுது, பேசி,  ஆடி,பாடி, ஓடி விளையாட ஆரம்பித்துவிட்டால். அம்மாடி எத்தனை பூரிப்பாள் இவள்.</p>
<p>இன்னும் ஒரே மாதம் தான், விடியலின் அழகை ரசிப்பேன்.சாரலின் இனிமையை ரசிப்பேன்,  மெல்லிசையை கேட்பேன், உலக இசைகளில் மூழ்குவேன்,கவிதைகள் பல படிப்பேன், தமிழை  ருசிப்பேன், தமிழ் இன்பத்தை பருகுவேன், மேகத்தை காண்பேன், மழையில் நடுவே வானில்  அவதரிக்கும் வானவில்லை காண்பேன், தூரலில் நனைவேன், தூரத்து மலையை படம்பிடிப்பேன்.  ஓவியம் கற்பேன், எனது அருமை அம்மாவை வரைவேன். இன்னும் ஏராளமான ஆசைகளுடம் நான்  வெளிவரப்போகிறேன்..</p>
<p>அம்மா உங்களுக்கு ஒரே ஒரு சின்ன வேண்டுகோள் தான். நான் இருக்க போவது எத்தனை  நாட்கள் தெரியவில்லை. எனக்கு முன்னர் நீங்களோ உங்களுக்கு முன்னர் நானோ இந்த அழகிய  உலகை விட்டு பிரிந்துவிடுவோம் கூடியவிரைவில். அதற்கு முன்னர் ஆனந்தமாக இருப்போம்.  உங்கள் கண்ணில் இருந்து கண்ணீரே வரக்கூடாது. என் கண்ணிலும் நீர் வராமல்  பார்த்துக்கொள்வீர்கள். என்ன அம்மா செய்ய உங்களுக்கு பக்குவம் இருக்கும் அழாமல்  இருப்பீர்கள், எனக்கு ஏது பக்குவம் கருவறையில் இருந்து இன்னும் மனிதர்கள் எவரையும்  பார்க்கவில்லையே.</p>
<p>எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை அம்மா, நான் ஏதாவது தவறு செய்துவிட்டேனோ?  எனக்கு ஏன் இந்த தண்டனை? உங்களுக்கு ஏன் இந்த தண்டனை? நினைத்தால் அழுகை அழுகையா  வருகின்றது தெரியுமா. எங்கே அழுதால் உங்கள் குடத்தில் நீர் நிரம்பி உங்களுக்கு  கருவறையில் பிரச்சனை வந்துவிடுமோ என பயமா இருக்கு, அதனால கண்ணீரை நான் வெளியே  விடுவதில்லை. உள்ளுக்குள் அடக்கி கொள்கிறேன்.என்னை நல்ல குழந்தை என சொல்லுங்கள்  அம்மா, அது எனக்கு ஆனந்தம் தரும். என் செல்ல அம்மா நீங்கள்..</p>
<p>என் சின்னஞ்சிறிய காது புதிதாய் வளர்ந்த சமயம் ,அப்போது தான் அந்த இடி செய்தி  என் காதில் விழிந்து. அப்பா ஏன் இப்படி செய்துவிட்டார்.ஏன் தவறான இடங்களுக்கு  சென்றார். சென்றவர் பாதுகாப்பாகவாவது இருந்திருக்க வேண்டாமா? இப்படி கொடிய நோயை  நமக்கும் கொடுத்துவிட்டாரே. கொஞ்ச காலம் முன்னர் கண்டுபிடித்து இருந்தாலாவது என்னை  மட்டும் காப்பாற்றி இருக்கலாம் என மருத்துவர் சொன்னார், இது தான் நான் கேட்ட முதல்  செய்தி. யாருக்கும் இந்த தரணியில் மீண்டும் இப்படிப்பட்ட கொடுமை நிகழ கூடாது அம்மா. <!-- D(["mb","-->பாவம் ஏது அறியாத நீங்க கூட இப்படி பட்ட நிலைக்கு வந்துவிட்டீர்கள்.தினமும் நீங்கள் புழுங்கி புழுங்கி அழுவது உலகிற்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம், ஆனால் உங்களுக்குள்ளே வசிக்கும் எனக்கு தெரியாமல் எப்படி இருக்க முடியும்.</p>
<p>திருமணம் நடக்கும் முன்னர் கணவனும் மனைவியும் ஏன் இரத்த பரிசோதனை செய்து கொள்ள கூடாது அம்மா? இது மற்றவர் மீது இருக்கும் நம்பிக்கைக்கு பாங்கு விளைவிக்கும் என நினைக்காமல் வரப்போகும் அடுத்த தலைமுறையையாவது காப்பாற்றலாம் அல்லவா? திருமணம் முடிக்கும் தன் துணைக்காவது ஏதும் வராமல் காப்பாற்றலாம் அல்லவா? இந்த நோய் தவறான முறையில் மட்டும் வருவது அல்லவே.இப்படிக்கு,</p>
<p>மரணத்தில் வலியோடு பிறக்கப்போகும் பல ஆயிரம் குழந்தைகளில் ஒன்று</p>
<p>விழியன்</p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/vizhiyan.wordpress.com/99/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/vizhiyan.wordpress.com/99/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/vizhiyan.wordpress.com/99/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/vizhiyan.wordpress.com/99/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/vizhiyan.wordpress.com/99/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/vizhiyan.wordpress.com/99/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/vizhiyan.wordpress.com/99/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/vizhiyan.wordpress.com/99/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/vizhiyan.wordpress.com/99/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/vizhiyan.wordpress.com/99/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/vizhiyan.wordpress.com/99/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/vizhiyan.wordpress.com/99/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vizhiyan.wordpress.com&blog=113865&post=99&subd=vizhiyan&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://vizhiyan.wordpress.com/2006/07/06/karuvariye-kallaraiyaga/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/b9fb167bdb56f7aa4b738a3be8e3c07c?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vizhiyan</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>Letter To Manmohan Singh</title>
		<link>http://vizhiyan.wordpress.com/2006/06/23/letter-to-manmohan-singh/</link>
		<comments>http://vizhiyan.wordpress.com/2006/06/23/letter-to-manmohan-singh/#comments</comments>
		<pubDate>Fri, 23 Jun 2006 08:48:40 +0000</pubDate>
		<dc:creator>vizhiyan</dc:creator>
				<category><![CDATA[கடிதம்]]></category>

		<guid isPermaLink="false">https://vizhiyan.wordpress.com/2006/06/23/letter-to-manmohan-singh/</guid>
		<description><![CDATA[அன்பும் அறிவும் நிறைந்த இந்திய முதல் மந்திரி மன்மோகன் சிங்  அவர்களுக்கு,
உங்கள் திருமுகத்தை இன்று காண நேரிட்டது. இன்று காலை தாங்கள் பெங்களூருக்கு  வந்து பத்து&#160;வரிசை &#160;சாலையை திறந்துவைத்தீர்கள். வாழ்த்துக்கள். இந்த சாலையாவது  திட்டமிட்ட நேரத்தில் நிறைவு அடையட்டும்.
இன்று தங்கள் வரவால் எனக்கு என் சக ஊர்க்காரகளுக்கும் சுமார் ஒரு மணி நேரம்  விரையம்.&#160;சாதாரண நாளிலேயே பெங்களூரு நாயகம், அப்போதே சுமார் அரை மணி எடுக்கும்  வீட்டில் இருந்து அலுவலகம் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vizhiyan.wordpress.com&blog=113865&post=96&subd=vizhiyan&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p>அன்பும் அறிவும் நிறைந்த இந்திய முதல் மந்திரி மன்மோகன் சிங்  அவர்களுக்கு,</p>
<p>உங்கள் திருமுகத்தை இன்று காண நேரிட்டது. இன்று காலை தாங்கள் பெங்களூருக்கு  வந்து பத்து&nbsp;வரிசை &nbsp;சாலையை திறந்துவைத்தீர்கள். வாழ்த்துக்கள். இந்த சாலையாவது  திட்டமிட்ட நேரத்தில் நிறைவு அடையட்டும்.</p>
<p>இன்று தங்கள் வரவால் எனக்கு என் சக ஊர்க்காரகளுக்கும் சுமார் ஒரு மணி நேரம்  விரையம்.&nbsp;சாதாரண நாளிலேயே பெங்களூரு நாயகம், அப்போதே சுமார் அரை மணி எடுக்கும்  வீட்டில் இருந்து அலுவலகம் வர. இன்று ஒன்றரை மணி நேரம் எடுத்தது. அட ஒரு பெரிய  மனிதர் வந்தால் அப்படி தான் இருக்கும் என சால்ஜாப்பு எல்லாம் வேண்டாம் ஐய்யா.</p>
<p>விமான நிலையத்தில் அருகே தங்குவதால் அடிக்கடி உங்களை போன்றோர்களால் தொல்லை.  காலை அலுவலகம், பள்ளி,கல்லூரி, பணிக்கு செல்பவர்களை பற்றி சிறித்தேனும் நினைத்து  பார்க்கின்றீர்களா?</p>
<p>என்னருகே அடுத்த வண்டியில் இருந்த சிறுவன் ஓ..வென்று அழுதுகொண்டே இருந்தான்.  பள்ளியில் ஆசிரியை திட்டுவார்களாம்.அவனிடம் என்ன சொல்லி சமாளித்து வைக்க?&nbsp;ஆட்டோ  ஒன்றில்&nbsp;சோக்காக உடையணிந்து ஒரு இளைஞன் பரபரப்பாக இருந்தான். கடிகாரம் பார்க்கிறான்  சாலை பார்க்கிறான். பாவம் ஏதோ நேர்காணலுக்கு செல்கிறான் போலும்.</p>
<p>சாலையின் முன்புறமும் பின்புறமும் நின்றிருந்த வண்டிகளும் அதன் சத்தமும் காதை  துளைத்து எடுத்தது. வானத்தையாவது பார்த்து ரசிக்கலாம் என்று வானத்தை நோக்கி  நின்றேன். மேகங்கள் இன்று வேகமாய் நகர்ந்தன. கருமேகங்கள் வெண்மேகங்களுடன் ஓட்ட  பந்தயம் வைத்து கொண்டிருந்தனவோ? இல்லை இன்னும் சற்று நேரத்தில் நீங்கள் விமானத்தில்  பறக்கும் போது வானத்தில் இருக்கும் மேக நடமாட்டத்தை நிறுத்தினாலும் நிறுத்துவீர்கள்  என்று வேகமாகாக போகின்றது போல எனக்கு காட்சியளித்தது.</p>
<p>என்னடா ரொம்ப பேசுகின்றாய் என நினைக்க வேண்டாம். இன்று இந்த ஒரு மணி நேரத்தால்  நகருக்கும் நாட்டுக்கும் இழந்த இழப்பை சொல்லவா?</p>
<p>&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp; 1. சுமார் 1000 முதல் 2000 பேர் சாலையில் முடங்கி இருந்தோம். 1500  என்று வைத்துக்கொள்வோம். மொத்தம் 1500 மணி நேர உழைப்பு வீண். சாலையில் நின்றபடி  என்ன உபயோகமாக செய்வது. காரில் இருந்தவர்கள் எத்தனை முறை தான் தினசரியை  படிப்பார்கள்..?</p>
<p>&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;2. ஆயிரம் வாகனம் இருந்தது என் வைத்துக்கொள்வோம்.(இந்த கணக்கும் மிக  கம்மி தான்) ஏர்போர்ட் ரோட் முழுதும் வண்டிகள் நின்றன. இந்த சாலை குறைந்தது 5  கிமீட்டர் இருக்கும்). ஆயிரம் வாகனமும் ஒரு மணி நேரம் ஒரே இடத்தில் நிற்காமல்  நீந்தி நீந்தி சென்றது. எவ்வளவு எரிபொருள் வீணாகி இருக்கும் என கணக்கு  போட்டுக்கொள்ளவும். </p>
<p>&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;3. இந்த புகை மண்டலத்தில் தினமும் பயணிப்பதே உடலுக்கு கேடு. அதில்  மேலும் ஒரு மணி நேரம் பயணம் செல்ல நேரிட்டும் அனைவரின் சுவசமும் சிறிதளவு மாசுபட்டு  போனது.</p>
<p>&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp; 4. காலையில் ஏற்படும் எரிச்சலால் அன்றைய நாள் முழுதும் வேலை சுமூகமாக  செல்லாது. இன்றைய நாளில் எந்த வேலையும் நிறைவாக நடைபெறாது.</p>
<p>ஆகவே, உங்கள் விஜயங்களையும் பயணங்களையும் மக்கள் எந்தவிதத்திலும் பாதிக்கத  வகையில் அமைத்துக்கொள்ளுங்கள். இது உங்களுக்கும் உங்களை போன்ற அரசியல்வாதிகளுக்கும்  பொருந்தும்..</p>
<p>உங்களால் ஒரு மணி நேரம் வீணானது தான் மிச்சம்,&nbsp;</p>
<p>இப்படிக்கு</p>
<p>உண்மையுள்ள&nbsp;இந்திய&nbsp;குடிமகன்.&nbsp;&nbsp;</p>
<p>&#8211;<br />
விழியன்</p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/vizhiyan.wordpress.com/96/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/vizhiyan.wordpress.com/96/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/vizhiyan.wordpress.com/96/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/vizhiyan.wordpress.com/96/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/vizhiyan.wordpress.com/96/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/vizhiyan.wordpress.com/96/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/vizhiyan.wordpress.com/96/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/vizhiyan.wordpress.com/96/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/vizhiyan.wordpress.com/96/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/vizhiyan.wordpress.com/96/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/vizhiyan.wordpress.com/96/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/vizhiyan.wordpress.com/96/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vizhiyan.wordpress.com&blog=113865&post=96&subd=vizhiyan&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://vizhiyan.wordpress.com/2006/06/23/letter-to-manmohan-singh/feed/</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/b9fb167bdb56f7aa4b738a3be8e3c07c?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vizhiyan</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>Getting Married ..3.57 Minutes Please</title>
		<link>http://vizhiyan.wordpress.com/2006/05/18/getting-married-357-minutes-please/</link>
		<comments>http://vizhiyan.wordpress.com/2006/05/18/getting-married-357-minutes-please/#comments</comments>
		<pubDate>Thu, 18 May 2006 04:40:45 +0000</pubDate>
		<dc:creator>vizhiyan</dc:creator>
				<category><![CDATA[கடிதம்]]></category>

		<guid isPermaLink="false">https://vizhiyan.wordpress.com/2006/05/18/getting-married-357-minutes-please/</guid>
		<description><![CDATA[விரைவில் திருமணமா&#8230;.3.57&#160;நிமிடங்கள்..
&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160; இன்று ஒரு நண்பனின்  திருமணம்.அதற்கு என்னால் செல்லமுடியவில்லை. இன்னும் இரண்டு திருமணங்கள் (அட  எனக்கில்லை) இந்த மாதத்தில் இருக்கின்றது. அதற்கும் செல்ல முடியுமா என்று  தெரியவில்லை. காரணம் திருமணங்கள் வார நாட்களில் இருந்துவிடுகின்றது.
&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160; திருமணங்கள் நமது கலாச்சாரத்தில் முக்கியமான ஒன்று.  இன்றும் மேலை நாட்டவர் நம்மை பார்த்து வியப்பதின் காரணத்தில் இதுவும் ஒன்று.  ஒவ்வொரு மதத்திற்கும், இனத்திற்கும் தனித்தனியே விசேஷமான முறைகளும் சடங்குகளும்  இருக்கின்றது. இந்த [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vizhiyan.wordpress.com&blog=113865&post=56&subd=vizhiyan&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><strong>விரைவில் திருமணமா&#8230;.3.57&nbsp;நிமிடங்கள்..</strong></p>
<p>&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp; இன்று ஒரு நண்பனின்  திருமணம்.அதற்கு என்னால் செல்லமுடியவில்லை. இன்னும் இரண்டு திருமணங்கள் (அட  எனக்கில்லை) இந்த மாதத்தில் இருக்கின்றது. அதற்கும் செல்ல முடியுமா என்று  தெரியவில்லை. காரணம் திருமணங்கள் வார நாட்களில் இருந்துவிடுகின்றது.</p>
<p>&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp; திருமணங்கள் நமது கலாச்சாரத்தில் முக்கியமான ஒன்று.  இன்றும் மேலை நாட்டவர் நம்மை பார்த்து வியப்பதின் காரணத்தில் இதுவும் ஒன்று.  ஒவ்வொரு மதத்திற்கும், இனத்திற்கும் தனித்தனியே விசேஷமான முறைகளும் சடங்குகளும்  இருக்கின்றது. இந்த ஒரு சந்தர்பத்தில்&nbsp;அன்பிற்கு இனியவர்களையும், நல  விரும்பிகளையும், குடும்பத்தினரையும், நண்பர்களையும் ஒரு சேர காணக்கிடைக்கும்.  இங்கு காயப்பட்ட பழைய உறவுகளுக்கு மருந்தளிக்கபடும்,&nbsp; புதிய நட்பு பூக்கும்,ஏன் சில  பல திருமணங்கள் கூட நிச்சயிக்கப்படும்.இதை பற்றி பேசிக்கொண்டே போகலாம்பா, தற்போது  திருமண நாள் என்று வரவேண்டும் என்று மட்டும் பேசலாம்.</p>
<p>&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp; சில வருடங்கள் முன்னர் வரை அனேகமாக அனைத்து  உறவினர்களும், நண்பர்களும் ஒரே ஊரிலேயே வசித்து வந்தனர்.திருமணம் எந்த&nbsp;நாளில்  வைத்தாலும் பிரச்சனையில்லை. எல்லோரும் வந்து விடலாம். ஆனால் இன்று நிலைமை அப்படி  இல்லை. நண்பர்கள், உறவினர்கள், நலம்விரும்பிகள், ஏன்&nbsp;ரத்த உறவுகளும் வேறு வேறு  திசைகளில் உலக பாகங்களில் இருக்கின்றனர். இந்த காலத்தில் பெற்றோர் உலகின் ஒரு  மூலையில் இருந்துகொண்டும், மணமக்கள் வேறு மூலையில் இருந்தபடியே திருமணத்தை காணும்  தொழில்நட்பம் வளர்ந்துவிட்டது, ஆயினும் திருமணத்தை நேரில் காண்பதை போல வருமா? அந்த  ஒரு நிமிட பெற்றோர் கண்ணீர் பிரிகையில், அந்த ஆனந்தம் நெஞ்சை நிறைக்கும்.(&nbsp;சொல்ல  வந்ததில் இருந்து எங்கேயோ போகுது &#8211; எங்கோ தொடங்கி, எங்கோ  சென்றுகொண்டிருக்கிறேன்&#8230;.&nbsp;&nbsp;)</p>
<p>&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp; சொல்லவருவது யாதெனில் உற்றார் உறவினர் வேறு வேறு இடத்தில்  இருக்கின்றனர்.வார நாட்களில் திருமணத்தை வைத்தால் எப்படி வருவது? என்ன தான் நண்பர்  மீதும், உறவினர் மீதும் நமக்கு பாசம் இருந்தாலும், விடுமுறை அளிக்கும்  மேனேஜருக்கும் நமக்கும் பாசம் சரியா இருக்கனும் இல்லை. உங்க திருமணத்தை காண  (கடைசியா சந்தோசமா இருப்பதை பார்க்கனும்னு ஆவல் இருக்காதா நண்பர்களுக்கு? )  அனைவருக்கும் எத்தனை ஆவல் இருக்கும். நேரில் மணமக்களை வாழ்த்துவது போல வருமா?  தினப்படி வேலையில் இருந்து சில நேரம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள வரலாம் என்றால் இப்படி  வார நாட்களில் வைத்தால் எப்படி? </p>
<p>&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp; ஏதோ , தற்போது தனியாக (பார்க்க இருவர் மாதிரி  இருப்பதெல்லாம் வேற கதைங்கோ) திருமணமாகாமல் எந்த நாளும் எங்கே கிளம்பவேண்டுமோ  கிளம்பிவிடலாம். சில காலம் கழித்து குடும்பஸ்தராகிவிட்டால்?? இருவருக்கும் தேதி  சரிபட்டு வரவேண்டும். அவங்க சம்மதிக்கனும் (!!!). அப்படியே காலப்போக்கில் குழந்தை  குட்டி,அவங்களுக்கு பள்ளி. (இந்த சிரமம் எல்லாம் தவிர்க்க&nbsp;நீங்க&nbsp;சீக்கிரமா திருமணம்  செய்துகொள்ளுங்கள்).</p>
<p>&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp; வார இறுதியெனில் எந்த தொல்லையும் இராது.விடுமுறை  எடுக்கவேண்டிய அவசியம் இருக்காது. அழகா வந்து வாழ்த்து விட்டு, சாப்பிட்டுவிட்டு  (அதுக்கு தான வருகிறோம்), உங்க தயவில் நண்பர்களை பார்த்துவிட்டு வரலாம்.</p>
<p>&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp; என்ன சொன்னாலும் நம் திருமண தேதியை தீர்மானிப்பது  ஜோதிடர்கள் தான். அவர்களிடம் சொல்லுங்கள் வார இறுதி சனி, ஞாயிறில் நல்ல நாள்  பார்க்க சொல்லி. முன்னரே முயர்ச்சித்தால் திருமணக்கூடமும் கிடைக்கும். அ</p>
<p>&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;உங்களை&nbsp;வாழ்த்த அனைவரும் உண்டு.இதில்&nbsp;ஐய்யமில்லை.&nbsp;  நண்பர்கள் அனைவரும், உறவினர் அனைவரும் உங்கள் திருமணத்திற்கு நேரில் நிம்மதியாக  வந்து, ஆசிர்வதித்து, உளமாற வாழ்த்த வழி செய்யுங்கள். இது சரியென பட்டால் அதன்படி  நடக்கலாம். சற்று முன்னரே திட்டமிட்டால்&nbsp;நினைத்தது எதுவாகினும் நடத்தலாம்.</p>
<p>கல்யாணமாகாத வாலிபர் சங்கத்து கடைசி உறுப்பினர்.</p>
<p>விழியன்.</p>
<p></p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/vizhiyan.wordpress.com/56/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/vizhiyan.wordpress.com/56/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/vizhiyan.wordpress.com/56/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/vizhiyan.wordpress.com/56/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/vizhiyan.wordpress.com/56/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/vizhiyan.wordpress.com/56/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/vizhiyan.wordpress.com/56/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/vizhiyan.wordpress.com/56/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/vizhiyan.wordpress.com/56/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/vizhiyan.wordpress.com/56/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/vizhiyan.wordpress.com/56/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/vizhiyan.wordpress.com/56/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vizhiyan.wordpress.com&blog=113865&post=56&subd=vizhiyan&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://vizhiyan.wordpress.com/2006/05/18/getting-married-357-minutes-please/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/b9fb167bdb56f7aa4b738a3be8e3c07c?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vizhiyan</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>மண்ணின் மைந்தனுக்கு ஒருபிடி மண்ணின் கடிதம்</title>
		<link>http://vizhiyan.wordpress.com/2006/03/23/great-salute/</link>
		<comments>http://vizhiyan.wordpress.com/2006/03/23/great-salute/#comments</comments>
		<pubDate>Thu, 23 Mar 2006 04:52:27 +0000</pubDate>
		<dc:creator>vizhiyan</dc:creator>
				<category><![CDATA[கடிதம்]]></category>

		<guid isPermaLink="false">https://vizhiyan.wordpress.com/2006/03/23/great-salute/</guid>
		<description><![CDATA[மண்ணின் மைந்தனுக்கு ஒருபிடி மண்ணின் கடிதம்
வீர மைந்தனே!,
இன்று உன்னை இழந்து எழுபத்தைந்து ஆண்டுகள் சென்றுவிட்டன. இன்றும் கூட நீயும் உனது கூட்டாளிகள் ராஜகுரு, சுக்தேவ் தூக்கிலடப்பட்ட காட்சியை என்னால் மறக்காமல் இருக்கமுடியவில்லை. என்ன வீரமடா உனக்கு, &#8220;என்னை தூக்கிலிடாதீர்கள், பீரங்கியின் வாயில் என் உடலை வைத்து வெடிக்க ச் செய்யுங்கள்&#8221; என்ற உன் கடைசி ஆசையும் நிராகரித்து விட்டனர் அந்த வெள்ளையர்கள்.அந்த முழக்கம் இன்றும் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறது. மார்ச் 23, 1931 இந்த தேதியை இந்திய [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vizhiyan.wordpress.com&blog=113865&post=14&subd=vizhiyan&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><strong>மண்ணின் மைந்தனுக்கு ஒருபிடி மண்ணின் கடிதம்</strong></p>
<p>வீர மைந்தனே!,</p>
<p><strong><img src="http://www.congresssandesh.com/march-2003/images/bhagat_singh.jpg" align="left" border="3" height="227" width="166" /></strong>இன்று உன்னை இழந்து எழுபத்தைந்து ஆண்டுகள் சென்றுவிட்டன. இன்றும் கூட நீயும் உனது கூட்டாளிகள் ராஜகுரு, சுக்தேவ் தூக்கிலடப்பட்ட காட்சியை என்னால் மறக்காமல் இருக்கமுடியவில்லை. என்ன வீரமடா உனக்கு, &#8220;என்னை தூக்கிலிடாதீர்கள், பீரங்கியின் வாயில் என் உடலை வைத்து வெடிக்க ச் செய்யுங்கள்&#8221; என்ற உன் கடைசி ஆசையும் நிராகரித்து விட்டனர் அந்த வெள்ளையர்கள்.அந்த முழக்கம் இன்றும் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறது. மார்ச் 23, 1931 இந்த தேதியை இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு மறக்க கூடாது. கத்தியின்றி ரத்தமின்றி இந்திய சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று வரலாறு தவறாகவே போதிக்கப்படுகின்றது. ஏதோ காந்தி கடை வீதியில் மிட்டாய்  வாங்கி வந்தது போல் அல்லவா நமக்கு கற்பிக்க படுகின்றது. ம்ம்ம்ம்.. &#8230;எவ்வளது இரத்தம் சிந்தப்பட்டது, எத்தனை உயிர்கள் பறிக்கப்பட்டது.</p>
<p>&#8220;வர்க்க பேதமற்ற சமத்துவ சமூக அமைப்பை உருவாக்க வேண்டும். அதற்கு முதலில் சுதந்திரம் வேண்டும்&#8221; என்று முழக்கமிட்ட இளைஞர் பட்டாளத்தின் முது கெலும்பு நீதான் என்று எனக்குத் தெரியும். &#8220;சுதந்திரம் ஒரு ஆயுதம் மட்டுமே, அதுவே இலட்சியம் அன்று&#8221; என்று உறுதியாய் நினைத்தாய். பலே! நீ இறந்த போது உனக்கு வயது 24. நம்ப முடியவில்லை. என் வீரனே! உன் வீரமும் செயல்திறனும், இலட்சியமும், நாட்டுபற்றும் உன் வரலாறு படித்த இளைஞர்களை நிச்சயம் மாற்றிவிடும்.   ஆனால்! என்று அவர்கள் படிக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லையே. அன்று வெள்ளையன் என்ற பேய் நாட்டை உலுக்கியது, இன்று வேறு வேறு பெயரிலே அது நாட்டை சின்னாபின்னமாக்குகின்றது. உன் வீரத்தை எம் இளசுகளுக்கு கொஞ்சம் தந்தால் என்ன? ஓ. அவர்கள் உள்ளுக்குள்ளே இருக்கிறதா?</p>
<p>இந்திய சுதந்திரத்தின் கறுப்பு தினம் 13-04-1919. நினைவிருக்கிறது அன்று தான் என்னை நீ கண்டெடுத்தாய். ஜாலின்வாலாபாக் படுகொலை நாட்டையும் இந்த உலகையும் உலுக்கியதே, பன்னிரெண்டு வயதில் ரயிலில் ஓடோடி வந்து ஜெனரல் டயரின் கொடுமையைக் கண்டு கொதித்துப் போனாய். அரக்கர்கள் அழிந்துவிட்டனர் என்ற புராணம் பொய்த்து அந்தக் கொடூரம் நிகழ்ந்தது. நொடிப்பொழுதில் ஆயிரம் ஆயிரம் உயிர்கள் பலி. இரத்த வெள்ளம். கிணற்றில் தண்ணீர் இருப்பதற்கு பதில் குருதியால் நிரம்பியது. எத்தனை உயிர்கள் பிரிந்தனவோ.</p>
<p>பிரிந்த உயிர்களைக் கண்டு நீ உஷ்ணப்பட்டாய். என்னருகே இருந்த என் சினேகித மண்களை நெற்றியில் பூசிக்கொண்டாய். அப்போதே பெருமிதம் அடைந்தேன். குருதி படிந்த என்னை ஒரு கண்ணாடிப் புட்டியில் எடுத்து வீடு சென்றாய். அன்று உன் வீட்டில் உனக்கு மிக பிடித்த உணவு தயார்செய்து இருந்தனர். அந்த வயதிலும் உண்ணாவிரதம் இருந்தாய். உன் சகோதரியிடம் என்னைக் காட்டி ஆவேசப்பட்டாய். தினம் தினம் என் மீது பூக்கள் தூவி நீ எழுச்சியுற்றாய். அன்று முதல் நீ என்னை பிரியவேயில்லை. உன்னோடு என்றும் நான் இருந்தேன்.என் மேல் ஏற்பட்ட இரத்தக் கறை இன்றும் அழியவில்லை மாவீரனே!.  அதை விட நீ சூடும் கதகதப்பு இன்றும் இருக்கிறது.</p>
<p>வாழும் போது மனிதர்கள் மண்ணுக்கு ஆசைப்படுகிறார்கள், நீயோ ஒரு பிடி மண்ணுக்கு ஆசைப்பட்டாய்.மனிதர்கள் இறந்தால் மரணம். மாவீரன் நீ இறந்ததால் அது வரலாறு.</p>
<p>இந்த மண்ணின் மைந்தனுக்கு என் வீரவணக்கம்</p>
<p>இரத்தக் கறைகளோடும், உன் சூட்டோடும்<br />
<strong>ஒரு பிடி மண்.</strong></p>
<p>~~~~~~~~~~~~~~~~~~~<br />
-விழியன்</p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/vizhiyan.wordpress.com/14/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/vizhiyan.wordpress.com/14/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/vizhiyan.wordpress.com/14/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/vizhiyan.wordpress.com/14/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/vizhiyan.wordpress.com/14/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/vizhiyan.wordpress.com/14/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/vizhiyan.wordpress.com/14/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/vizhiyan.wordpress.com/14/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/vizhiyan.wordpress.com/14/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/vizhiyan.wordpress.com/14/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/vizhiyan.wordpress.com/14/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/vizhiyan.wordpress.com/14/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vizhiyan.wordpress.com&blog=113865&post=14&subd=vizhiyan&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://vizhiyan.wordpress.com/2006/03/23/great-salute/feed/</wfw:commentRss>
		<slash:comments>10</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/b9fb167bdb56f7aa4b738a3be8e3c07c?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vizhiyan</media:title>
		</media:content>

		<media:content url="http://www.congresssandesh.com/march-2003/images/bhagat_singh.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>A Letter of Affection</title>
		<link>http://vizhiyan.wordpress.com/2006/03/20/a-letter-of-affection/</link>
		<comments>http://vizhiyan.wordpress.com/2006/03/20/a-letter-of-affection/#comments</comments>
		<pubDate>Mon, 20 Mar 2006 10:09:49 +0000</pubDate>
		<dc:creator>vizhiyan</dc:creator>
				<category><![CDATA[கடிதம்]]></category>

		<guid isPermaLink="false">https://vizhiyan.wordpress.com/2006/03/20/a-letter-of-affection/</guid>
		<description><![CDATA[அன்பில் ஓர் கடிதம் 
அன்பு நண்பனே,
நலம் நலம் அறிய ஆவல்.
யார் இது இந்த முகம் தெரியாத நண்பர் நம்மை விசாரிக்கிறாரே என்ற ஆர்வம் உங்கள் கண்களில் தெரிகின்றது. நான் உங்களுக்கு மிகவும் வேண்டப்பட்டவன் தான். நீங்கள் இருக்க நினைத்த இடத்தில் இன்று நிற்கின்றேன். இன்னும் புரியவில்லை? விளக்கமாக சொல்கிறேன் கேளுங்கள்.
காதல் எப்படிப்பட்ட மனிதனையும் விட்டுவைப்பதில்லை. நீங்களும் நானும் அப்படியே. அரும்பு மீசையில் இது காதலா, அல்லது கவர்ச்சியா என்று கூட தெரியாமல் காதலித்ததுண்டு. நீங்கள் முதன்முதலாய் நேசித்தது [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vizhiyan.wordpress.com&blog=113865&post=12&subd=vizhiyan&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><b>அன்பில் ஓர் கடிதம் </b></p>
<p>அன்பு நண்பனே,</p>
<p>நலம் நலம் அறிய ஆவல்.</p>
<p>யார் இது இந்த முகம் தெரியாத நண்பர் நம்மை விசாரிக்கிறாரே என்ற ஆர்வம் உங்கள் கண்களில் தெரிகின்றது. நான் உங்களுக்கு மிகவும் வேண்டப்பட்டவன் தான். நீங்கள் இருக்க நினைத்த இடத்தில் இன்று நிற்கின்றேன். இன்னும் புரியவில்லை? விளக்கமாக சொல்கிறேன் கேளுங்கள்.</p>
<p>காதல் எப்படிப்பட்ட மனிதனையும் விட்டுவைப்பதில்லை. நீங்களும் நானும் அப்படியே. அரும்பு மீசையில் இது காதலா, அல்லது கவர்ச்சியா என்று கூட தெரியாமல் காதலித்ததுண்டு. நீங்கள் முதன்முதலாய் நேசித்தது நான் மணக்கப்போகும் பெண்ணைத்தான். அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள் நண்பரே.</p>
<p>யார்தான் காதலிக்கவில்லை? காதலித்த அனைவரும் அதே சமயம் ஒன்றாய் இணையும் சந்தர்ப்பமும் அமைவதில்லை. எந்த மனிதனை வேண்டுமானாலும் கேளுங்கள் &#8211; மனதின் ஏதாவது இடுக்கில் தன் முதல் காதல் அனுபவங்களை அசை போட்டுக் கொண்டுதான் இருப்பான். அதற்காக தற்போது சந்தோஷமாக இல்லை என்றா அர்த்தம்? இருக்கிறார்கள் என்பதே நிஜம். ஆனாலும் அவள் அவன் பெயரை எங்கேனும் கேட்கும் போது அவர்களையும் மீறி பழைய எண்ணங்கள் ஆட்கொள்ளும். அந்த சில நொடி சந்தோஷம் உண்மையான சந்தோஷத்தைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என்பதே நிஜமான நிஜம்.</p>
<p>நானும் ஒரு பெண்ணால் ஆட்கொள்ளப்பட்டேன் என் கனாக் காலத்தில். ஆனந்தமாக துள்ளிக் குதித்த நாட்களில் அவள் அமைதியாய் நுழைந்தாள் கல்லூரிக்குள்ளும் என் மனதிற்குள்ளும். எதனால் ஈர்க்கப்பட்டேன் என்று இன்று வரை திட்டவட்டமாக சொல்ல முடியவில்லை என்பது என் தெளிவின் மீது எனக்கு எழுந்த சந்தேகம். நண்பர்களாய் உலா வந்தோம். மனதில் அவளை சுமந்தபடி நித்தம் நித்தம் என் காதல் வளர்ந்தது. ஒரு தலைக்காதல்தான். சொல்லவும் முடியவில்லை மெல்லவும் முடியவில்லை.</p>
<p>சொல்லாத காதல் செல்லாக் காசு என்று படிக்க, ஒரு மாலை வேளையில் தனிமையில் இருவரும் நடந்து செல்லும் போது இனிமையாய் நானும் காதலைத் தெரிவித்தேன். நிதானமாக முடிவெடுப்போம் இரண்டு வருடம் கழித்து என்றாள். வயதில் என்னை விடச் சின்னவள், நிதானத்தில் மூத்தவள். நண்பர்களாய் இருப்போமே கடைசிவரை என்றாள். நாம் ஒரு கணக்குப் போட காலம் ஒரு கணக்குப் போட்டது. ஊசியின் துவாரம் வழியே உலகைப் பார்த்த நான், கல்லூரி விட்டு வேலை இல்லாமல் அலைந்த போது வெட்ட வெளியில் அம்மணமாக நிற்பதாக உணர்ந்தேன்.</p>
<p>அதுவரை என்னை மட்டும் பார்த்த நான் என்னைச் சுற்றியும் பார்க்க ஆரம்பித்தேன். எனக்கான பாதை என்ன என்பதை முடிவு செய்தேன். அதற்குள்ளாக என் மனதில் பெண்ணின் மீது இருந்த காதல் காணாமல் போனது. பின்னர் ஒரு பெரிய போராட்டமே நடந்தது அது காதல் தானா என்று. எனக்கானவளைத் தேடினேன். சற்றே வித்தியாசனமானதாக இருக்கும் என் பயணத்திற்கு முதலில் யாராவது கிடைப்பார்களா என்றே சந்தேகமாக இருந்தது. கிடைத்தாள் உங்களின் தோழி.</p>
<p>முகம் தெரியாமல் சினேகிதித்தோம் இணையத்தில். எங்களது கருத்துக்களையும், கனவுகளையும் பறிமாறிக் கொண்டோம். வாழ்த்திக் கொண்டோம் நல்ல வாழ்வு அமைய. மெல்ல மெல்ல நாங்கள் பயணிக்க விரும்பும் பாதை ஒன்றாய் இருப்பதைக் கண்டோம். ஏன் என் விரல் நுனி பிடித்து அவளும் நானும் பயணிக்கக் கூடாதெனக் கேள்வி கேட்டோம். ஆராய்ந்தோம்.</p>
<p><b>உணர்வுகளால் ஈர்க்கப்பட்டோம்.. உணர்ச்சிகள் தொற்றிக் கொண்டன.. காதல் பிறந்தது&#8230;</b></p>
<p>நாங்கள் முதன் முதலாய் அழுது பேசிக் கொண்டது என் பழைய ஈர அனுபவங்களையும் அவளின் (+உங்களின்) கதைகளையும். அது என்ன ஆண் தன் பழைய காதலை சொல்லலாம், பெண் சொல்லக்கூடாதா? எங்கள் இருவர் தோள்களும் ஈரமாகின. உங்களை அந்த பழைய நினைவுகளுக்குக் கொண்டு சென்று விட்டேன் என்றால் மன்னியுங்கள் நண்பரே.</p>
<p>நான் கூட நினைத்ததுண்டு, என் பழைய நினைவுகளை மறந்து எப்படி வாழ்வது. ஆனால் இவளின் அன்பு என்னைத் திணறடிக்க வைத்துவிட்டது. முதலில் நான் இனி என் தோழியைக் காணவே கூடாது, அது என்னை கதறடிக்கும் என்றுதான் நினைத்தேன். இப்போது காலம் தெளிவினையும் பக்குவத்தையும் தந்துள்ளது.</p>
<p>அவளோடு நன்றாகப் பழகுகிறேன். இன்றும் எனக்கு நல்ல தோழியாக அவளும் இவளும். எங்கள் திருமண அழைப்பிதழை முதன் முதலாக உங்களுக்கு அனுப்ப வேண்டும் என்பது இவளின் ஆவல். அத்தனை அன்பும் மரியாதையும் வைத்துள்ளார் என் மீதி பாதி. திடீர் என்று பத்திரிக்கை அனுப்பினால் உங்கள் மனம் என்ன பாடுபடும் என்று தெரியாதா? அதனால்தான் உங்களுக்கு முன்னேற்பாடாக எங்கள் தோழமை பற்றிக் கூறிவிடலாம் என்று இந்தக் கடிதம்.</p>
<p>திருமணத்திற்கு முன்னர் நல்ல நண்பர்கள் வட்டத்தில் இருந்துவிட்டு பிறகு தன் கணவரே என்று இருக்கும் பெண்ணைப்போல என் இல்லாளும் இருக்கக் கூடாது என்பது என் ஆசை. ஆதலால் அவளின் நண்பர்களை இப்போதே சந்தித்துப் பழகி விடுகிறேன். உறவு விட்டுப்போகக் கூடாதல்லவா? நீர்தான் அயல் தேசத்தில் போய் உட்கார்ந்திருக்கிறீர். தாயகம் திரும்பினால் அடியேனை சந்திக்க ஒரு நாள் ஒதுக்க வேண்டும். முடியாதது என்று ஏதும் இல்லை நண்பா.</p>
<p>திறந்த மனதோடு காத்திருப்போம் உங்களுக்காக நாங்கள் இருவரும்..</p>
<p>நேசமுடன்..<br />
அன்பு தோழன்.</p>
<p><b>-விழியன்</b></p>
<p>http://www.nilacharal.com/stage/kathai/tamil_story_251b.asp</p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/vizhiyan.wordpress.com/12/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/vizhiyan.wordpress.com/12/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/vizhiyan.wordpress.com/12/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/vizhiyan.wordpress.com/12/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/vizhiyan.wordpress.com/12/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/vizhiyan.wordpress.com/12/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/vizhiyan.wordpress.com/12/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/vizhiyan.wordpress.com/12/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/vizhiyan.wordpress.com/12/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/vizhiyan.wordpress.com/12/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/vizhiyan.wordpress.com/12/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/vizhiyan.wordpress.com/12/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vizhiyan.wordpress.com&blog=113865&post=12&subd=vizhiyan&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://vizhiyan.wordpress.com/2006/03/20/a-letter-of-affection/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/b9fb167bdb56f7aa4b738a3be8e3c07c?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vizhiyan</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பெண்கள் தின வாழ்த்துக்கள்</title>
		<link>http://vizhiyan.wordpress.com/2006/03/08/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/</link>
		<comments>http://vizhiyan.wordpress.com/2006/03/08/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/#comments</comments>
		<pubDate>Wed, 08 Mar 2006 12:21:23 +0000</pubDate>
		<dc:creator>vizhiyan</dc:creator>
				<category><![CDATA[கடிதம்]]></category>

		<guid isPermaLink="false">http://vizhiyan.wordpress.com/2006/03/08/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/</guid>
		<description><![CDATA[அன்பு தங்கைக்கு,
 அண்ணனின்  ஆசிர்வாதங்களும் அன்பும் என்றும் உன்னோடு இருக்கும்.நீ நம்பிக்கையோடு இருக்கும்  வரை நிச்சயம் நலமாய் இருப்பாய் என்று தெரியும்.பணிச்சுமை அதிகம் என வருத்தப்பட்டுகொண்டாய். முடியாது
 என்று கருதினால் கடுகு கூட பாரமாகலாம், முடியும்  என நினைத்துவிட்டால் பாறை கூட பனித்துளிபோல கறைந்து போகலாம். முடியும் என்று  நினை, அதேசமயம் ஆனந்தமாக வேலை செய். யாருக்கு தெரியும் உன் சின்ன புன்சிரிப்பு  எத்தனை காயப்பட்ட இதயங்களுக்கு மருந்தாக இருக்குமோ? [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vizhiyan.wordpress.com&blog=113865&post=7&subd=vizhiyan&ref=&feed=1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div class='snap_preview'><br /><p><font size="3"><font size="3">அன்பு தங்கைக்கு,</font></font></p>
<p><font size="3"><font size="3"> </font><font size="3">அண்ணனின்  ஆசிர்வாதங்களும் அன்பும் என்றும் உன்னோடு இருக்கும்.நீ நம்பிக்கையோடு இருக்கும்  வரை நிச்சயம் நலமாய் இருப்பாய்</font><font size="3"> என்று தெரியும்.பணிச்சுமை அதிகம் என வருத்தப்பட்டுகொண்டாய். முடியாது</font></font></p>
<p><font size="3"><font size="3"> </font><font size="3">என்று கருதினால் கடுகு கூட பாரமாகலாம், முடியும்  என நினைத்துவிட்டால் பாறை கூட பனித்துளிபோல கறைந்து போகலாம். முடியும் என்று  நினை, அதேசமயம் ஆனந்தமாக வேலை செய். யாருக்கு தெரியும் உன் சின்ன புன்சிரிப்பு  எத்தனை காயப்பட்ட இதயங்களுக்கு மருந்தாக இருக்குமோ? சிரித்த முகத்தோடு  இரு.ஆனால் சிந்தித்துக்கொண்டும் இரு.</font></font></p>
<p><font size="3"><font size="3"> </font><font size="3">இன்று சர்வதேச பெண்கள்  தினம் என்பதை அறிவாய் என்று எண்ணுகிறேன். <b>பெண்கள் தின  வாழ்த்துக்கள்</b> தங்கையே. இன்று என்ன செய்வதாக உத்தேசித்துள்ளாய்? எனக்கு  தெரியும் என் தங்கை கண்டிப்பாக ஏதாவது ஒன்றை வித்தியாசமாக இன்று செய்வாள் என்று.  அதனை உன்னிடமே விட்டுவிடுகிறேன்.</font></font></p>
<p><font size="3"><font size="3"> </font><font size="3">பெண்கள் தின கொண்டாட்டம் பற்றிய  வரலாற்றைவிட இந்த நாள்<br />
</font><font size="3">எதற்கு என்ற கேள்வி உனக்கு எழுவது சகஜம் தான்.  என்ன மகளீர் இன்னும் </font><font size="3">முன்னேறவில்லையா? எத்தனை சாதனை படைத்துள்ளனர்? எத்தனை  துறைகளில் முன்னேற்றம் பெற்றுள்ளனர்? தனியாக ஒரு நாள் தேவையா? என்கிற  கேள்வி நியாயம் தான, உண்மை தான். கடந்த நூற்றாண்டின்  கடைசி பாதியில் அபார </font><font size="3">மாற்றங்கள், வளர்ச்சிகள், எழுச்சிகள். ஆனால் பெணகள் பல  நூற்றாண்டுகளாக<br />
ஒடுக்க பட்டுத்தான் இருக்கிறார்கள், இந்த சமூகம் ஒவ்வொரு  நிலையிலும்,காலகட்டத்திலும் ஆணைவிட பெண் தாழ்த்தபட்டவள்  என்று வேறு வேறு வடிவில் கற்று தந்துவிட்டது. எங்கு தப்பு ஏற்பட்டது என்று  ஆராய்வதைவிட இதனை மாற்ற வழிமுறைகள் என்ன என்று ஆலோசிப்பதே சிறந்தது.</font></font></p>
<p><font size="3"><font size="3"> </font><font size="3">பற்பல நூற்றாண்டுக்கு முன்னர் பெண்னை தெய்வமாகவும்,  ஆறுகளுக்கு </font><font size="3">கூட பெண் பெயரையே வைத்தும் போற்றி வந்தனர்.தற்போது  அவர்களை தெய்வமாக எண்ண வேண்டாம், சமமாக மதித்தால் அதுவே போதும். முதலில் பெண்கள்  தாங்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை  அறியவேண்டும். இருவரும் இந்த பூமியில் ஆனந்தமாக வலம் வர சமமான உரிமைகள் உண்டு.  இது ஆணித்தரமாக ஒவ்வொரு நெஞ்சத்திலும் பதியவேண்டும். அது ஒரு நாளில்  நடந்துவிடாது, அடிக்கடி<br />
சொல்லப்பட வேண்டும் வேறு வேறு வடிவங்களில். அப்படி  சொல்ல வந்த </font><font size="3">நாளாகத்தான் இந்த சர்வதேச பெண்கள் தினத்தை நான்  பார்க்கிறேன்.</font></font></p>
<p><font size="3"><font size="3"> </font><font size="3">உன் தினசரி வாழ்வில் நீ ஒரு பெண் என்பதால் நீ ஒடுக்குபடுவதாக  நினைத்தால் உடனே குரல் கொடு, எதிர்த்துப் போராடு. உன்னை சுற்றி நடக்கும் அவலங்களுக்கு உன் செயல்களால் சாட்டையடி கொடு.</font></font></p>
<p><font size="3"><font size="3"> </font><font size="3">சரி உனக்கு நான் சொல்வது  புரிந்திருக்கும் என்று  நினைக்கிறேன். பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக வாழ  வாழ்த்துகிறேன்.</font></font></p>
<p><font size="3"><font size="3"><br />
உனக்கும், உன் நண்பர்கள் அனைவருக்கும் என் பெண்கள் தின  வாழ்த்துக்கள்</font></font></p>
<p><font size="3"><font size="3"> </font><font size="3"><b /></font><b /></font></p>
<p><b> </b><b><font size="3"><font size="3"><b> </b></font><font size="3"><b><b>-விழியன்</b></b></font></font></b></p>
<p><b> </b><b><font size="3"><font size="3"><b> </b></font> </font></b></p>
<img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/vizhiyan.wordpress.com/7/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/vizhiyan.wordpress.com/7/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/vizhiyan.wordpress.com/7/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/vizhiyan.wordpress.com/7/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/vizhiyan.wordpress.com/7/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/vizhiyan.wordpress.com/7/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/vizhiyan.wordpress.com/7/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/vizhiyan.wordpress.com/7/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/vizhiyan.wordpress.com/7/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/vizhiyan.wordpress.com/7/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/vizhiyan.wordpress.com/7/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/vizhiyan.wordpress.com/7/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vizhiyan.wordpress.com&blog=113865&post=7&subd=vizhiyan&ref=&feed=1" /></div>]]></content:encoded>
			<wfw:commentRss>http://vizhiyan.wordpress.com/2006/03/08/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/feed/</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/b9fb167bdb56f7aa4b738a3be8e3c07c?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vizhiyan</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>