Skip to content

Teacher’s Day Special Kavithai

September 5, 2006

கனாக் காலங்கள் ஆசிரியர் தினம்

வீர வணக்கங்கள் !!!
இன்று ஆசிரியர் தினம்.
கடந்து வந்த ஏணிப்படிகளை
கொஞ்சம் எண்ணிப் பார்க்கிறேன்.

முதல் முதலாய் பள்ளி வாசல்.
கண்களில் கண்ணீரோடு
நீ ஆசையாய் என்னை அள்ளி எடுத்து
அரவணைத்து சுவாசப்படுத்தினாய்..
அந்த கதகதப்பு, பாசம், நேசம்
இன்றும் இருக்கிறது
நெஞ்சினில் அழியாமல்
அம்மாவிற்கு இணையாய் வைத்தேன்..

அரும்பு வயதிலிருந்து குறும்பு வயதிற்கு தாவல்..
விடலை பருவம்
தவறுகளுக்கு குறைவைக்கவில்லை..
முட்டி போட வைத்து தண்டித்தாய்
அந்த வலி இன்னும் இருக்குது
தப்பு செய்ய விடாமல் தடுக்குது..
அப்பாவிற்கு இணையாய் வைத்தேன்..

அரும்பு மீசை வயதில் ஏனோ
நீ சொன்னதெல்லாம் தப்பாகவே தெரிந்தது
மெல்ல மெல்ல நான் வளர
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளிருந்து உடைத்து வெளிவர
பரந்து விரிந்த உலகை நீ காட்டினாய்

நாளைய இந்தியாவை நீ
தினம் தினம் செதுக்கையிலே சிற்பியாய் தெரிகிறாய்
தோல்வியில் நான் துவழ
தோளில் சாய்த்து எனை தேற்ற தோழனாய் தெரிகிறாய்

எனதருமைக்குரியவர்களே!!
மீண்டும் தாயை நினைவு கூர்ந்தீர்கள்..
எப்போது தெரியுமா?
வகுப்புகளின் கடைசி இருக்கையில் அமர்ந்து
தங்கள் தாலாட்டில் இருக்கை படுக்கையானபோது..
ஆழ்ந்த உறக்கம்..
சட்டென இடிமுழக்கம்..

விழித்தால் தான் தெரிந்தது
என் எதிரே அர்ச்சனைகளின் ஆரம்பமென..

தங்களை பிரியும் போதெல்லாம்
கண்களில் ரணகளம்
தூர தேசத்திலோ
எதிர்பாரா சந்திப்பிலோ
எங்கள் உயர்ந்த நிலைக்கண்டு
நல்ல குடிமக்களாய் பார்க்கையில் தான்
உங்கள் கண்களில் எத்தனை குதூகலம்

குயவனிடம் களிமண் பானையாகிறது
உங்களிடம் நாங்கள் மனிதர்களாகிறோம்..

மாதா பிதா குரு தெய்வம்..
அர்த்தம் விளங்கவில்லை வெகுநாள்..
புரிந்தபோது தெரிந்தது..
மாத பிதா குரு மூவரும் தெய்வமென..

எத்தனை எத்தனை முகங்களடா..
இருந்தும்
எத்தனை எத்தனை அமைதியடா..
தாய் தந்தையர் தந்தது உயிர்
நீ தந்தது உண்ர்ச்சி..

மனிதனை நாகரீகமாக்கும் மகான்களே!!!
மலர்கள் மீது..

\nவீர வணக்கங்கள் !!!
வீர வணக்கங்கள் !!!

–விழியன்

(முதுநிலை படிப்பின் முதல் ஆண்டில், ஆசிரியர் தினத்தன்று கால்மணி அவகாசத்தில் எழுதி – பேசிய உரை)

 
14 Comments leave one →
  1. balaji permalink
    August 16, 2011 2:49 pm

    very nice……….!

  2. Tharshan permalink
    September 28, 2012 2:07 pm

    enithu enithu umu kavithuvam enithuth

  3. Tharshan permalink
    September 28, 2012 2:08 pm

    enithu enithu umathu kavithuvam enithuth

  4. September 3, 2013 12:16 pm

    P

  5. September 3, 2013 12:17 pm

    H

  6. Suseela permalink
    September 4, 2013 11:40 pm

    Alagana kavithai arumaina varigal

  7. by ramesh laddhuvadi permalink
    September 5, 2013 4:03 am

    tamillu perumai un kavithai ithu varikal alla urier ula oviyam

  8. sugi permalink
    September 4, 2014 12:12 pm

    ungal thiramaikkuen iniya walthugal meelum malara walthukiren

  9. varsha devi permalink
    September 5, 2014 2:24 am

    ungal kavithai padikum pothu ungal meethu asiriar meethum meguntha mariyathai erpaduthukirathu sir

  10. padma kani permalink
    October 10, 2014 12:43 pm

    very niceeeee

  11. Ashwin R R permalink
    August 31, 2015 2:30 pm

    very very nice

  12. dinesh permalink
    September 3, 2018 4:18 pm

    Please add more kavithaigal in Tamil

  13. saravanan permalink
    September 4, 2018 10:55 am

    super

  14. pooja permalink
    September 4, 2019 1:30 pm

    i love this kavidhai,very niceeeeeeeeeee

Leave a reply to dinesh Cancel reply