Skip to content

இரண்டாம் வருடத்தில் – பண்புடன் வாசகர் வட்டம்

January 18, 2012

இப்ப தான் ஆரம்பிச்சத்து போல இருக்கு அதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிட்டு இருக்கு. பண்புடன் வாசகர் வட்டம் இரண்டாம் வருடத்தில் காலடி எடுத்து வைக்கின்றது.

புத்தகம் விசிறிகள், புத்தக நேசகர்கள் சிலர் கூடி புத்தகம் பற்றியும் வாசிப்பு பற்றியும் பேசும் / விவாதிக்கும் முயற்சியே வாசகர் வட்டம். இது என்ன செய்துவிடுகின்றது?

1. புத்தகங்களை அறிமுகம் செய்கின்றது.

2. எழுத்தின் வெவ்வேறு  பார்வையை காட்டுகின்றது.

3. வாசிப்பினை உயிர்ப்புடன் வைத்துக்கொள்கின்றது

4. ஒத்த நேசமுடைய நண்பர்களை கூட்டுகின்றது.

5. புதிய எல்லைகளையும் இலக்குகளையும் காட்டுகின்றது

6. இப்படி பட்டியலிட்டு எதையும் செய்ய முடியாது எனவும் சொல்கின்றது.

இவ்வளவு நடக்குது, விருப்பம் இருந்தால் அவசியம் வாங்க. புத்தகம் பற்றி பேசலாம்.

நாள் : 21, ஜனவரி 2012

நேரம் : மாலை 3.30 மணி முதல்

இடம் : விழியன் இல்லம், 2 A, சாந்தம்மாள் தெரு, சிவன் நகர், துண்டலம். ஐயப்பன் தாங்கல், சென்னை – 77. (ஐயப்பன் தாங்கல் டிப்போவில் இருந்து நேராக ஆயில் மில் ரோட்டின் கடைசியில் உள்ளது)

தொடர்புக்கு : 9094009092

இதுவரை உறுதி செய்துள்ளவர்கள்:

நிலாரசிகன், நந்தா & துணைவி, நரேஷ், மோர்சுப்ரா, ஸ்டாலின் பெலிக்ஸ், ஆசாத், உதயன், ப்ரியா, ஸ்நாபக் விநோத், ராஜசங்கர், ப்ரியன், உமாநாத் & விழியன்

– விழியன்

One Comment leave one →
  1. January 18, 2012 8:03 am

    வாழ்த்துகள்.

Leave a comment