For Research
மதுமிதா அவர்களின் ஆராய்ச்சிக்காக..
வலைப்பதிவர் பெயர்: விழியன்
வலைப்பூ பெயர் : விழியன் பக்கம்
சுட்டி(url) : : https://vizhiyan.wordpress.com
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)
ஊர்: : வேலூர்
நாடு : இந்தியா
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: சித்தார்த்
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 2006-02-23 7:19:57 am
இது எத்தனையாவது பதிவு: 59
இப்பதிவின் சுட்டி(url): https://vizhiyan.wordpress.com/for-research.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:
உலகம் என் எழுத்தினை அறிந்துகொள்ள. கருத்துகள் குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடங்காமல் இருக்க.
சந்தித்த அனுபவங்கள்:
ஏராளம் ஏராளம்.
பெற்ற நண்பர்கள்:
மற்ற வலைப்பூங்களில் இன்னும் அதிகம் பின்னூட்டமிட முடியவில்லை. அதனால் வலைப்பூவினால் கிடைத்த நண்பர்கள் மிகச் சிலரே.
கற்றவை:
நேற்று கற்றவை, இன்று பழையதாகி போகின்றது. (எல்லாம் அல்ல). கற்றல் ஒரு நீண்ட பயணம். நாளும் கற்கிறேன். கற்றதையே எழுத்துக்களாக பரிணமிக்க செய்கிறேன்.
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:
நிறைய..யார் இருக்கிறார்கள் தடுக்க?
இனி செய்ய நினைப்பவை:
குழந்தைகள் இலக்கியத்தில் என்னால் முடிந்த மாற்றம்.
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
சொந்த பெயர் உமாநாத். பிறந்து வளர்ந்தது வேலூர். தற்போது பெங்களூரில்.படித்தது Mtech Communication. ஆர்வம் எல்லாவற்றிலும் தான்.ஆர்வக்கோளாறு அல்ல :-). "தோழியே உன்னை தேடுகிறேன்" என்ற புத்தகம் எழுதியுள்ளேன்.
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
வாழ்த்துக்கள்.
—
விழியன்
https://vizhiyan.wordpress.com