Skip to content

சிறுவர் இதழ்கள் பட்டியல் (March 2022)

March 2, 2022

சிறுவர் இதழ்கள் பட்டியல் (March 2022)

இன்றைய பெரும்பாலான வாசகர்களும் எழுத்தாளர்களும் சிறுவர்கள் இதழ்கள் வழியே தான் வாசிப்பினை துவங்கினர். தற்சமயம் வந்துகொண்டிருக்கும் இதழ்களின் தொகுப்பு. உங்கள் குழந்தைகளுக்கு/மாணவர்களுக்கு இயன்ற அளவு இந்த இதழ்களை அறிமுக செய்யுங்கள்.

சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான இதழ்கள் & விவரங்கள்

  1. துளிர் – சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ்
    தொடர்புக்கு – 044 28113630
  2. பெரியார் பிஞ்சு – மாத இதழ் – விடுதலை
    To subscribe – http://www.periyarpinju.com/new/
  3. குட்டி ஆகாயம் – காலாண்டிதழ் – சிறார் இதழ்
    தொடர்புக்கு – +919843472092
  4. தும்பி – சிறார் இதழ்
    தொடர்புக்கு-9843870059
  5. பஞ்சுமிட்டாய் – காலாண்டிதழ்- குழந்தைகளுக்கான இதழ்
    தொடர்புக்கு – +91 97317 36363
  6. மாயாபஜார் – தி இந்து – பிரதி புதன்
  7. சுட்டி யானை – மாத இதழ் -தொடர்புக்கு – 095001 25126

8.பூஞ்சிட்டு – இணைய சிறார் இதழ்
https://www.poonchittu.com/

  1. பொம்மி – மாத இதழ்
    தொடர்புக்கு – 9750697943
  2. பட்டம் – (மாணவர்களுக்கான இதழ்) தினமலர்
    http://www.dinamalar.com/supply.asp?ncat=1360
  3. இளம்பிறை – மாத சிறார் இதழ்
    தொடர்புக்கு – 90422 13453, 7845925638
  4. தேன்சிட்டு (சிறுவர்களே நடத்தும் சிறார் இதழ்)
  5. மகிழ் – மாத இதழ் (தொடர்புக்கு – 7397222767)
  6. தங்கமலர் – தினத்தந்தியின் வாராந்திர இணைப்பு இதழ் –
  7. சிறுவர்மணி – தினமணி – வாராந்திர இணைப்பு இதழ்
  8. அறிந்திரன் (இலங்கையில் இருந்து சிறார் இதழ்)
    டிசம்பர் 2020 முதல்
  9. Kids புன்னகை
    தொடர்புக்கு – 9940090596
  10. சிறுவர் மலர் – தினமலர் – பிரதி வெள்ளி
  11. சம்பக் (தமிழ் & ஆங்கிலம்)

(தொகுப்பு – விழியன்)

சிறார் நூல் தயாரிப்பில் கவனிக்கவேண்டிய அம்சங்கள்

August 3, 2021

சிறார் நூல் தயாரிப்பில் கவனிக்கவேண்டிய அம்சங்கள் – விழியன்

ஒரு சிறுவர் நூலில் உள்ளடக்கத்தை தாண்டி நிறைய விஷயங்களை கவனிக்க வேண்டும். உள்ளே இருக்கும் எழுத்து எவ்வளவு வலிமையானதாக இருக்கவேண்டுமோ அதே போல book makingலிலும் கவனம் நிறைய தேவை. என் பார்வையில் இருந்து இதனை முன் வைக்கின்றேன். பல விஷயங்களை கவனித்து செய்தாலும் சில சமயம் சமரசம் செய்ய வேண்டியும் இருக்கின்றது.

  1. புத்தகம் என்ன வயதினருக்கானது என குறிப்பிட வேண்டும். மழலைப்புத்தகம் (<8) அல்லது சிறார்களுக்கானது (>8) என்றாவது குறிப்பிட்டு இருக்கவேண்டும். சமீபத்திய வருடங்களில் இந்த போக்கு வெகுவாக தமிழ் சூழலில் மாறி வருகின்றது.
  2. சிறார் புத்தகத்திற்கு வாழ்த்துரை தேவையா என்பதே என் எண்ணம். அது இருந்தாலும் ஒரு பக்கதிற்கு மிகாமல் இருந்தால் நலம். மற்ற மொழி புத்தகங்களில் இந்த போக்கினை காணமுடியாது. நேராக கதைக்கோ நாவலுக்கோ பாடலுக்கோ சென்றிடுவார்கள். பெரியவர்களுக்கான புத்தகத்தினை வடிவத்தை பார்த்து அதே போல இருக்கவேண்டும் என்று செய்கின்றார்கள் என்றே நினைக்கிறேன். என்னைப்பொறுத்தவரை முன்னுரைகள் தேவையில்லை. அரைபக்கத்தில் நன்றிகளையும் புத்தகம் உருவான விதத்தையும் குறிப்பிடலாம்.
  3. லே அவுட் மிக முக்கியம். வடிவமைப்புகள் மாறிக்கொண்டே வருகின்றது. தொலைக்காட்சி, வீடியோ கேம்களில் இருந்து மீட்டு புத்தகத்தின்பால் குழந்தைகளை கொண்டுவருகின்றோம் எனில் புத்தகம் புத்தம் புதியதாக, பார்த்ததும் வாசிக்கும்படியான அமைப்பில் இருக்கவேண்டும்.
  4. அச்சிடுவது தரமான தாள்களாக இருப்பது அவசியம்.
  5. ஓவியங்களில் அதிக கவனம் செல்லவேண்டும். சிறார்களுக்கான புத்தகத்தில் ஓவியங்களில் வேறு வேறு முயற்சிகளை செய்ய வேண்டும். வேறு வேறு ஸ்டைல்கள். அப்ப மழலைப்புத்தகத்தில், அதில் இன்னும் அதிகமாக செய்ய வேண்டும். ஓவியம் எப்படி இருக்கவேண்டும் என்பது மிக நெடிய தலைப்பு.
  6. ஒரே ஓவியத்தை நூலின் வெவ்வேறு இடங்களில் பயன்படுத்துவதை (பாதி வெட்டி, ஒரு பகுதி) தவிர்க்கவேண்டும். அது பக்கத்தை நிரப்ப பயன்படுத்தபப்டும் உத்திமட்டுமே. அது ஒருவகையில் குழந்தைகளுக்கு ஏமாற்றமே.
  7. எழுத்துப்பிழைகள் எவ்வளவு தவிர்க்கமுடியுமோ அவ்வளவு தவிர்க்கப்படவேண்டும். குழந்தைகளின் மனதில் ஆழமாக இவை பதிந்துவிடும். ஏகப்பட்ட எடிட்டிட் கண்டிப்பாக தேவை. பிழைகளை 99% குறைக்கவேண்டும். 1% நமக்கே தெரியாமல் என்ன செய்தாலும் நிகழும்.
  8. ஏராளமான எழுத்துருக்கள் தற்சமயம் வந்துவிட்டது. அவற்றை பயன்படுத்தலாம். ஆனால் அச்சுக்கு போகும் முன்னர் ஒரு முறை ப்ரிண்ட் எடுத்து பார்ப்பதும் நல்லது. பல சமயங்களில் கணினியில் நன்றாக தெரியும் எழுத்துரு அச்சில் கொஞ்சம் ஏமாற்றிவிடும்.
  9. தொகுப்பு புத்தகங்களை போடும்போது கதை ஆசிரியர்களின் சிறு குறிப்பே போதுமானது அதே சமயம் அது சரியானதாகவும் பார்த்துக்கொள்ளவேண்டும், அதிலே தகவல் பிழைகள் வராமல் பார்த்துக்கொள்வது நல்லது.
  10. தொகுப்பு நூல்கள பதிப்பிக்கும்போது ஆசிரியர்களின் குறிப்புகளை மொத்தமாக இரண்டு பக்கத்தில் அடக்கிடுவது நல்லது. நடுநடுவே கொடுப்பது வாசகர்களை எரிச்சலூட்டும். தொகுப்புகள் எல்லாம் வாசகர்கள் வாசிக்கத்தானே? மேலும் தொகுப்புக்களில் கதை எந்த மாதம்/ஆண்டில் எழுதப்பட்டது என்றும் இருப்பது நலம். வரலாற்று ஆவணமாகவும் அது அமையும்.
  11. நிறுத்தக்குறிகள், கமா, ஆச்சரியக்குறிகள், மேற்கோள்கள ஆரம்பிப்பது முடிப்பதும் (quotation marks), single quotesல் ஆரம்பித்தால் அதிலேயே முடிப்பது ஆகியவைகளை கவனிப்பது அவசியம். இது வாசிப்பினை எளிமையாக்கும். தேவையான இடங்களில் பெரிய பாராக்களை உடைத்துபோடுவதும் நல்லது.

இவை அனைத்துமே ஒரு உடலின் மேல் தோல்,எலும்பு மட்டுமே உயிர் உள்ளே இருக்கும் உள்ளடக்கமும் எழுத்தும் தான்.

  • விழியன்.

தமிழ் சிறுவர் இதழ்கள் பட்டியல் (டிசம்பர் 2020)

December 9, 2020

சிறுவர் இதழ்கள் பட்டியல் (டிசம்பர் 2020)

இன்றைய பெரும்பாலான வாசகர்களும் எழுத்தாளர்களும் சிறுவர்கள் இதழ்கள் வழியே தான் வாசிப்பினை துவங்கினர். தற்சமயம் வந்துகொண்டிருக்கும் இதழ்களின் தொகுப்பு. உங்கள் குழந்தைகளுக்கு/மாணவர்களுக்கு இயன்ற அளவு இந்த இதழ்களை அறிமுக செய்யுங்கள்.

சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான இதழ்கள் & விவரங்கள்

  1. துளிர் – சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ்
    தொடர்புக்கு – 044 28113630
  2. பெரியார் பிஞ்சு – மாத இதழ் – விடுதலை
    To subscribe – http://www.periyarpinju.com/new/
  3. குட்டி ஆகாயம் – காலாண்டிதழ் – சிறார் இதழ்
    தொடர்புக்கு – +919843472092
  4. தும்பி – சிறார் இதழ்
    தொடர்புக்கு-9843870059
  5. பஞ்சுமிட்டாய் – காலாண்டிதழ்- குழந்தைகளுக்கான இதழ்
    தொடர்புக்கு – +91 97317 36363
  6. மாயாபஜார் – தி இந்து – பிரதி புதன்
  7. சுட்டி யானை – மாத இதழ் -தொடர்புக்கு – 095001 25126

8.பூஞ்சிட்டு – இணைய சிறார் இதழ்
https://www.poonchittu.com/

  1. பொம்மி – மாத இதழ்
    தொடர்புக்கு – 9750697943
  2. பட்டம் – (மாணவர்களுக்கான இதழ்) தினமலர்
    http://www.dinamalar.com/supply.asp?ncat=1360
  3. இளம்பிறை – மாத சிறார் இதழ்
    தொடர்புக்கு – 90422 13453, 7845925638
  4. தங்கமலர் – தினத்தந்தியின் வாராந்திர இணைப்பு இதழ் –
  5. சிறுவர்மணி – தினமணி – வாராந்திர இணைப்பு இதழ்
  6. அறிந்திரன் (இலங்கையில் இருந்து சிறார் இதழ்)
    டிசம்பர் 2020 முதல்
  7. kids புன்னகை
    தொடர்புக்கு – 9940090596
  8. சிறுவர் மலர் – தினமலர் – பிரதி வெள்ளி
  9. சம்பக்
  10. தேன்சிட்டு (சிறுவர்களே நடத்தும் சிறார் இதழ்)

(தொகுப்பு – விழியன்)

தேசிய கல்விக்கொள்கையும் CBSE பள்ளிகளும் – விழியன்

August 29, 2020

தேசிய கல்விக்கொள்கையும் CBSE பள்ளிகளும்

மிகவும் மும்முரமாக தேசிய கல்விக்கொள்கை CBSE பள்ளிகளில் விவாதிகப்படுகின்றது. அதன் சாதகங்கள் என்னவென்று ஒவ்வொரு ஆசிரியரும் விளக்க வேண்டுமாம். சரி ஒரு பெற்றோராக தேசிய கல்விக்கொள்கையால் CBSE பள்ளிகளில் என்ன மாற்றம் வரும் என்ற கேள்வி எழுவது நியாயமானது. பார்த்துவிடுவோமே.

1. ECCE – முன்பருவக்கல்வி ஏற்கனவே CBSE பள்ளிகளில் உள்ளது. மேலும் கொள்கை பரிந்துரைக்கும் பல விஷயங்களுக்கு எதிராகவே நடைமுறை உள்ளது. எழுதுவது ப்ரீ கேஜியிலேயே துவங்கிவிடுகின்றது. வேறு எந்த நாட்டிலும் இந்த வயதில் பேனாவை பிடிப்பதில்லை. மூன்று வயதில் இருந்தே படி, எழுது. இதனை மாற்ற எந்த பரிந்துரையும் இல்லை.

2. Curtailing Dropout Rates and Ensuring Universal Access to Education at All Levels – இதற்கும் CBSE பள்ளிகளுக்கும் சம்பந்தமில்லை.

3. Restructuring school curriculum and pedagogy in a new 5+3+3+4 design – இதனாலும் ஒரு பாதிப்பும் இல்லை. மாற்றமும் இல்லை. வழக்கம்போலவே குழந்தைகள் பள்ளிக்கு செல்வார்கள். பள்ளிக்குள் நிகழும் எதுவும் வெளிப்படையாக பெற்றோர்களுக்கு தெரியப்போவது இல்லை.

4. Eradicate Rote Learning – ஏற்கனவே 1986ல் பரிந்துரைக்கப்பட்டது தான். CBSE ஆசிரியர் கையேட்டில் வருடா வருடம் தவறாமல் இடம்பெறும் வரிகள் தான். மீண்டும் புதிதாக சொல்லப்பட்டு இருக்கு. நடைமுறையில் இது எப்படி என்று எதுவும் சொல்லப்படவில்லை.

5. ஆசிரியர்கள் – தனியார் பள்ளி ஆசிரியர்களும் TET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்கின்றது கல்விக்கொள்கை. சராசரியாக ஒரு பள்ளியில் 10-20% ஆசிரியர்கள் கூட இதனை எழுதி இருப்பது சிரமமே (தனியார் பள்ளிகளில்). சர்வ நிச்சயமாக இது கட்டாயமாக்கப்படாது. ஆகவே இதனால் ஒரு பயனும் இல்லை.

6. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றதா? யார் பயிற்சி அளிக்கின்றார்கள்? அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் அளவிற்கு அளிக்கப்படுகின்றதா? தனியார் பள்ளிகளில் அதற்கான இடமும் சாத்தியமும் இருக்கின்றதா?

7. சிறப்புக்குழந்தைகளுக்கான இடம் தனியார் பள்ளிகளில் இருக்கின்றதா? இடமில்லை என்றால் மறுகேள்வி கேட்க முடியுமா?

8. ஆரம்ப வகுப்புகளில் சிறப்புக்குழந்தைகளை அடையாளம் காணும் பயிற்சிகள் அளிக்க ஏற்பாடு இருக்கின்றதா? இந்த தேசிய கல்விக்கொள்கையில் அதனைப் பற்றிய குறிப்புகள் இல்லை. தனியார் பள்ளி நிர்வாக நினைத்தால் சத்தியம் உண்டு.

9. தேசிய அளவில் ஒரே பாடதிட்டம். இது ஏற்கனவே நடைமுறையில் இருப்பது தான். CBSE பள்ளிகளில் ஒரு மாற்றமும் இதனால் இல்லை. தமிழ் பாடம் மட்டுமே தமிழக பாடநூல் புத்தகத்தினை பயன்படுத்துகின்றனர். இனியும் அப்படித்தான் இருக்கும்.

10. Holistic development of learners – எத்தனை பள்ளிகளில் நூலக பயன்பாடு சிறப்பாக உள்ளது? சில Chains of Schoolகளில் ஒரே செட் புத்தகத்தினை மட்டும் வைத்துக்கொண்டு எங்கு என்ஸ்பெக்‌ஷனோ அங்கே இதனை இடம் மாற்றிக்கொள்கின்றனர்.

11. Reduce curriculum content to enhance essential learning and critical thinking – இது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது மறு சீரமைக்கப்பட்ட பாடதிட்டம் வந்தபிறகே சொல்ல இயலும். இதே விஷயங்களை CBSEயும் NCF 2005ம் சொல்லிக்கொண்டு தான் இருக்கின்றது. அதனை ஏட்டில் இருந்தில் வகுப்பிற்கு கொண்டு வருவதில் தானே சிக்கல்.

12. Experiential learning – இவை ஓரளவிற்கு உள்ளது. Brouchreகளில் போடவதற்காவது இதனை பள்ளிகள் ஏற்கனவே செய்கின்றனர்.

13. Empower students through flexibility in course choices – இது எந்த பள்ளியிலும் சாத்தியமில்லாத விஷயம். நடைமுறைச் சிக்கல் தான். ஒன்று அளவிற்கு அதிகமான மாணவர்கள் இருந்தால் சாத்தியம். ஏனெனில் 1-2 மாணவர்களுக்காக ஒரு ஆசிரியரை தனியார் பள்ளிகள் நியமிக்குமா? இதுவும் ஏட்டளவில் தான் இருக்கும்.

14. Three language – அடுத்த புள்ளிக்கு செல்லலாம். பள்ளிகளில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கு. ஆனால் இந்தி, ப்ரெஞ்ச் தவிர்த்து மற்ற மொழிகள் உள்ளனவனா அல்லது ஏற்பாடு இருக்குமா என்பது சந்தேகமே.

15. கட்டணம். பள்ளிகள் தேவையான கட்டணம் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் நிச்சயம் அவர்கள் தொண்டு தான் செய்ய வேண்டும் (ப்ளீஸ் சிரிக்கக்கூடாது). ஆகவே கட்டணம் சர்வ நிச்சயமாக அதிகரிக்கும். ஏற்பாடு செய்ய ஆரம்பித்துவிடலாம்.

16. தனியார் பள்ளிகளிடம் “Light but tight”ஆக இருப்பார்கள். இது எப்படிப்பட்ட நடவடிக்கை, சட்டதிட்டம் என்பதனை ஆராய தனி பல்கலைக்கழகம் அமைப்படும்.

17. Vocational Courses : இங்கே வழங்கப்படும் தொழிற்கல்வி வேறு மாதிரி தான் இருக்கும். பள்ளியை விட்டு இறங்கமாட்டார்கள்.

18. இன்னும் இன்னும் நிறைய ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும். தற்சமயம் படிக்கும் பாடங்களுடன் கூடுதலாக 20 புதிய பாடங்கள் இருக்கும்.

19. அடிக்கடி தனியார் பள்ளிகளும் அரசுப்பள்ளிகளும் ஒன்று என்றே சொல்லிக்கொண்டு போகின்றது கொள்கை. சர்வநிச்சயமாக சின்னப்பள்ளிகள் கால ஓட்டத்தில் மூடப்பட்டு chain of schools மட்டுமே சந்தையில் இருக்கும். ஒன்று விழுங்கப்படும் அல்லது விரட்டி அடிக்கப்படும். பள்ளிகளை கார்பரேட்டுகள் நிர்வகிக்கும் அபாயம் நிச்சயம் உள்ளது.

20. National Textbooks with Local Content and Flavour – இதுவும் அரசுப்பள்ளிகளுக்கே பொருந்தும்.

21. தேர்வுகள். ஏற்கனவே CBSE க்ரேட் சிஸ்டத்திற்கு நகர்ந்துவிட்டது. மேலும் 3,5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை சிபிஎஸ்.சி பள்ளிகள் ஏற்குமா என்று தெரியவில்லை. ஏற்றுக்கொண்டால் 9 ஆம் வகுப்பில் நடக்கும் கூத்துகள் இனி 3ஆம் வகுப்பு முதற்கொண்டே நடைபெறும். சரியாக படிக்காத மாணவர்களை வடிகட்ட, வெளியேற்ற, நெருக்க எல்லா ஏற்பாடுகளும் நடக்கும். சரியாக தேர்வு எழுதமாட்டான் என்றால் மீண்டும் அதே வகுப்பில் படிக்க வைக்கும் கொடூரங்களும் நடக்கும். முதலாம் வகுப்பில் சரியாக படிக்கவில்லை என்று பெயிலாக்கிய சம்பவங்களை நாம் ஏற்கனவே பார்த்துக்கொண்டு இருக்கின்றோம்.

22. ஆசிரியர்கள் : தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலைமை மிகவும் பரிதாபமாகிவிடும். ஏற்கனவே அவர்களுக்கான சம்பளம் சொற்பம். ஆனால் வேலை வாங்குவது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு தான். எதையும் கேள்வி கேட்கவும் முடியாது பாவம். தேசிய கல்விக்கொள்கையில் சொல்ப்படும் ஒவ்வொரு விஷயமும் நடைமுறைப்படுத்த ஆசிரியர்கள் தான் தேவை. கற்பித்தலில் துவங்கி, அவர்களை மதிப்பீடு செய்வது வரையில். எல்லா பகுதியிலும் கூடுதல் சுமை. அதற்கு ஏற்ப மாணவர்: குழந்தை விகிதம் இருக்க வேண்டும். போதிய கால அவகாசம் அவர்களுக்குத்தர வேண்டும். சுதந்திரமாக சிந்திக்க விடவேண்டும். அதிகமான பயிற்சிகள் வேண்டும். They must be allowed to be teachers rather than tutors. இந்த பகுதியில் கோட்டைவிட்டால் மொத்தமும் முட்டுச்சந்து சிக்கலில் தான் போய் நிற்கும்.

23. Career Management and Progression (CMP) – இது ஆசிரியர்களுக்கு. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இது சாத்தியமா?

24. Efficient Resourcing and Effective Governance through School Complexes/Clusters – இது நடைமுறையில் சாத்திமில்லாத விஷயம். அதாவது தனியார் பள்ளி மாணவர்களும் அரசுப்பள்ளி மாணவர்களும் உரையாடுவது. Resourceகளை பகிர்ந்துகொள்வது. எந்த இரண்டு பள்ளிகள் உரையாடும்போது ஏகப்பட்ட உரசல்கள் ஏற்படும். பள்ளி நிர்வாகம் 100% தவிர்க்கும்.

25. //8.7. Public and private schools (except the schools that are managed/aided/controlled by the Central government) will be assessed and accredited on the same criteria, benchmarks, and processes, emphasizing online and offline public disclosure and transparency, so as to ensure that public-spirited private schools are encouraged and not stifled in any way.// தனியார் பள்ளியின் பண விவகாரங்கள் அனைத்தும் பொதுவெளியில் வைப்பார்களாம். அப்புறம் அரசு அதிகாரிகளை கவனிக்கும் செலவினங்களையும் இந்த பட்டியலில் சேர்ப்பார்களா தெரியவில்லை.

26. Critical Thinking என்று சொல்லிவிட்டு பழமைகளை கொண்டு வரவேண்டும் என்றே கொள்கை முழுக்க சொல்கின்றது. இரண்டு முரண்பாடான விசயங்கள் அல்லவா?

27. பல்வேறு Olympiadகளை நடத்த வேண்டும் என்று வெளிப்படையாக கொள்கை முன்மொழிந்துள்ளது. ஏற்கனவே வாரம் ஒரு ஒலிப்பியாட்களை இந்த பள்ளிகளில் நடந்துகொண்டு தான் இருக்கின்றது, இது மேலும் அதிகரிக்கும். அவை அறிவினையோ வேட்கையையோ மேம்படுத்துவதில்லை. Olympiad will not enhance knowledge but create pressure and competition

28. தாய்மொழி வழி கற்பித்தல் இங்கு சாத்தியமில்லை. முடியாது என சொல்லிவிட்டார்கள்.

29. கூடுதலாக பல்வேறு கோ-கரிக்குலர் (கலைத்திட்டம்) செயல்பாடுகள் பள்ளியில் இணைக்கப்படும். இதில் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் பள்ளி கூடுதலாக வசூலிக்கும்.

30. வீட்டுப்பாட சுமை குறித்தோ, பள்ளியில் விளையாட்டு மைதானம், ஏற்பாடுகள் குறித்தோ எந்த குறிப்பும் பரிந்துரையும் இல்லை. பெரும்பாலான பெருமைகள் வெறும் நீரில் எழுதிய எழுத்துக்களாகவே உள்ளன. மீதியும் கவனமான நடைமுறைப்படுத்தலில் உள்ளது.

ஆகவே…

– விழியன்

#UnderstandingNEP2020

Talks on NEP 2020 by Vizhiyan

August 17, 2020

தேசிய கல்விகொள்கை 2020 வெளி வந்ததும் நான் கலந்து கொண்ட நிகழ்வுகளின் வீடியோ தொகுப்புகள் இவை

1. SFI வட சென்னை சார்பாக “தேசிய கல்விக்கொள்கையை அனுகுவது எப்படி?

2. ஜெயா ப்ளஸ் – புதிய கல்விக் கொள்கை மாணவர்களுக்கு சிக்கலா?

3.  புதுச்சேரி வாசகர் வட்டம்  “ஆசிரியர்கள் எவ்வாறு தேசிய கல்விக் கொள்கையை அணுகுவது

4.  பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம் – புதிய தேசியக் கல்விக்கொள்கை- கலந்துரையாடல் – ஒருங்கிணைப்பு.

5. சமத்துவ பறவைகள் வாசகர் வட்டம் – புதிய தேசிய கல்விக்கொள்கை 2020

(after 38 minutes)

6. தமுஎகச தொடர் அரங்கம் “குழந்தைகள் உளவியலும் தேசிய கல்விக் கொள்கையும்

தமிழில் தேசிய கல்விக் கொள்கை – மக்களின் மொழிபெயர்ப்பு

  • விழியன்

 

 

கொஞ்சம் மெளனம் கலையுங்கள் – விழியன்

February 6, 2020

கொஞ்சம் மெளனம் கலையுங்கள்

நேரடியாக மாணவர்களிடம் கேட்டிருக்கேன். கடிதம் எழுதி இருக்கின்றார்கள். கடிதங்களை வாசித்து கதறி அழுதிருக்கின்றேன். “சார், ஸ்கூல்ல விட்றதே இருட்டுற நேரம் அப்புறமும் போய் வீட்ல உக்காந்து ஹோம் வர்க் கொடுப்பாங்க” “அண்ணா, ஞாயித்து கிழமையாச்சும் கலர் டிரஸ் போட்டுவர பர்மிஷன் வாங்கித்தாங்க அண்ணா” “சார், அடிங்க ஆனா பொம்பள புள்ளங்க முன்னாடி எதுக்கு அடிக்கிறாங்க” “கடைசி எக்ஸாம் கூட எழுதிக்கிறேன் சார், க்ளாஸ் டெஸ்ட் எழுத ஏதாச்சும் மெஷின் இருக்கா சொல்லுங்க” கிராமத்தில் வசதி வாய்ப்புகளே குறைவாக இருக்கும் மூன்று நான்கு அரசுப்பள்ளிகளுக்கு சென்று அவர்களிடம் நெருக்கமாக பேசிப்பாருங்க (அதிகாரி தோரணையில் இல்லாமல் ஒரு அண்ணன், அக்காள் தோரணையில்) அவர்களுக்கு எவ்வளவு மறுக்கப்பட்டிருக்கு என்பது விளங்கும். இனி எவ்வளவு மறுக்கப்பட இருக்கு என்பது புரியும். மேலே சொன்னவை யாவும் பத்தாம் வகுப்பு குழந்தைகள் சொன்னவையே. இது எட்டாம் மற்றும் ஐந்தாம் வகுப்பிற்கு பரவிக்கொண்டிருக்கின்றது. குழந்தைகள் மீது அக்கரை கொண்ட அத்தனை பேரும் கொஞ்சம் மெளனம் கலையுங்கள்

– விழியன்

#TNStop5th8thPublicExam

ஆசிரியர் என்பவர் வெறும் ஒன்றும் ஒன்றும் ரெண்டு என கற்றுக்கொடுப்பவரா? – விழியன்

February 6, 2020

ஆசிரியர் என்பவர் வெறும் ஒன்றும் ஒன்றும் ரெண்டு என கற்றுக்கொடுப்பவரா? – விழியன்

கீழே இருக்கும் வாட்ஸப் பார்வர்ட் வைரலாக ஆசிரியர்கள் மத்தியில் பரவி வருகின்றது. ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுக்கான எதிர்ப்புக் குரல் ஆசிரியர்கள் எழுப்பத்தேவையில்லை என்பதே அதன் சாராம்சம். NCFன் (National Curriculum Framework) முதல் பக்கத்திலேயே ஒரு வரி வரும். ஒரு தேசத்தின் உயரித்தினை நிர்ணயிப்பவர்கள் ஆசிரியர்கள். அவ்வளவு பொறுப்புமிக்கவர்கள். சமூகத்தில் வேறு எவரை விடமும் மிகமிக உயரிய பணியில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஆசிரியர்கள். அவர்களே அடுத்த தலைமுறையினரை கட்டமைக்கின்றார்கள். அவர்களே பெற்றோர்களை விடவும் அதிக நேரம் குழந்தைகளுடன் செலவிடுகின்றனர். அவரக்ளுக்கு தான் நிச்சயம் எது குழந்தைக்கு நல்லது எது சரிவராது எனத் தெரியும். தேவையில்லாத பாரத்தை பிஞ்சுகளின் மீது வைக்கும்போது அவர்கள் என்ன இன்னல்களுக்கு ஆளாவார்கள் என ஆசிரியர்களுக்கே அதிகம் தெரியும், தெரிய வேண்டும். இது மாணவர்களின் திறனை அறிய அல்ல ஆசிரியர்களின் திறனை அறிய என்று ஒரு வரியை சேர்த்து ஆசிரியர்களை அமைதியாக்க முயல்கின்றார்கள். எது சரி எது தவறு என பேசவாவது செய்ய வேண்டிய கடமை ஆசிரியர்களுடையது. சரி இப்படி வைத்துக்கொள்வோம், மாணவர்களின் திறன் விரும்பிய அளவிற்கு இல்லையெனில் ஆசிரியர்களின் வேலைக்கு சிக்கல் எனில் சும்மா விட்டுவிடலாமா? மூன்று ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சிக்கு உத்திரவாதம் அளித்திருப்பதையும் நம்பிக்கொண்டு இருக்கின்றோம்.

இன்னும் இன்னும் எத்தனை ஆசிரியர்கள் வீடுவீடாக சென்று ஸ்கூலுக்கு வாங்கடா ஸ்கூலுக்கு வாங்கடா என அழைத்து வந்துகொண்டு இருக்கின்றார்கள். தேர்வு என்ற ஒற்றை வார்த்தை அவர்களை ஓடச்செய்துவிடாதா? பொதுமக்கள், பெற்றோர்கள், இன்னும் சொல்லப்போனால் அரசியல் கட்சிகளிடம் இருந்து ஒலி காத்திரமாக வரவேண்டும் ஆனால் அதனை விட அன்பான ஒலி ஆசிரியர்களிடம் இருந்து ஒலிக்க வேண்டும், ஓய்ந்துவிடாதீர்கள் ஆசிரிய சமூகமே. மெளனத்தை களையுங்கள்.

ஒன்றும் ஒன்றும் ரெண்டு என மட்டும் கற்றுக்கொடுப்பவர்கள் ஆசிரியர்கள் அல்ல. ஒன்றும் ஒன்றும் ஏன் மூன்றல்ல, ஏன் ஒன்றும் ஒன்றும் இரண்டென்று கற்றுக்கொள்ள வேண்டும், ஒன்றும் ஒன்றும் எப்படி 10 என டிஜிட்டலில் மாறுகின்றது என்பதையும் கற்றுத்தரவேண்டும். ஒன்றும் ஒன்றும் இரண்டென குழந்தை கற்கவிடாமல் தடுக்கப்படும்போதும் குரல் கொடுக்க வேண்டியதும் ஆசிரியர் தான்.

– விழியன்

Whatsapp Forward
ஒரு சந்தேகம்,
5,8 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு வைப்பதில் ஆசிரியர்களுக்கு ஏன் இவ்வளவு வேதனை. கோபம்
முதலாம் வகுப்புக்கு வேண்டுமானாலும் பொது தேர்வு வைக்கட்டும். நாம் சிறப்பாக கற்றுக்கொடுப்பது நம் கடமை அதனை சிறப்பாக செய்வோம். அது போதும் பெற்றோரும், பொதுமக்களும்தான் பொதுதேர்வுக்கு கலவைபடனும் ஆனால் அவர்கள் யாரும் துளி கூட கவலைபடவில்லை, வருத்தப்படவும் இல்லை. பின் ஏன் ஆசிரியர்கள் இதனை இப்படி பிரச்சினை ஆக்குகிறீர்கள், போராடுகிறீர்கள்… ஆசிரியர்கள் பொது தேர்வை எதிர்பதனால் பெற்றோரும் பொதுமக்களும் ஆசிரியர்கள் ஒழுங்காக பாடங்களை நடத்தவில்லை எனவே அவர்கள் இதனை எதிர்கிறார்கள் என கூறுகின்றனர்..

கல்லிற்குக்கீழ் நசுங்கும் பூக்கள் – விழியன்

February 6, 2020

கல்லிற்குக்கீழ் நசுங்கும் பூக்கள் – விழியன்

(கல்கி 09-02-2020 இதழில் வெளியான கட்டுரை)

ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு என்ற பாரத்தினை குழந்தைகள் தாங்குவார்களா? பொதுத்தேர்வுகள் வேண்டும் எனவும் தேவையே இல்லை எனவும் இரண்டாக பிரிந்து விவாதங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன.

தேவை என்பவர்களின் வாதம் பிரதானமாக குழந்தைகளுக்கு படிப்பின் மீது கவனம் வருவதில்லை என்பதே. கடந்த பத்து ஆண்டுகளில் சிறப்புக் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகின்றன. அவற்றின் ஊற்றுக்கான காரணங்களை ஆராயாமல் அவர்களை பொதுக்கல்வியின் சட்டகத்திற்குள் எப்படி தீவிரமாக எடுத்து வருவது என செயல்பாடுகள் நடக்கும் வேளையில் இந்த முன்னெடுப்பு மிகுந்தபின்னடைவு. கிராமப்புறத்திலும் நகரப்புறத்திலும் வேறு வேறான காரணங்களுக்காக நிராகரிக்கப்பட வேண்டி உள்ளது. நகரங்களில் ஏற்கனவே Peer Pressure அதிகமாக உள்ளது. என் பையன் இது படிச்சான், என் பையன் அந்த களாசில் சேர்ந்திருக்கான் என பெருமைப்பட்டுக் கொள்ளும் பெற்றோர் மத்தியில் இந்த பொதுத்தேர்வு நிச்சயம் சலசலப்பினை ஏற்படுத்தும். தேவையே இல்லாமல் குழந்தைகளை நிர்பந்திக்க ஆரம்பிப்பார்கள். விளையாட்டு, இதர கலைகள் கற்றல், சுற்றுலா, குடும்ப நிகழ்வுகள், சும்மா இருத்தல் என எல்லாவற்றிற்கும் தடா ஆரம்பித்துவிடும். இது பத்தாம வகுப்பிற்கு நடக்கும் அளவிற்கு வீரியமாக இருக்காது என்றபோதிலும் நிச்சயம் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு இருக்கும். இது குழந்தைமையை பறிக்கும் ஒரு மிகப்பெரிய வன்முறை.

 

கூடுதலாக கல்வியில் மட்டுமே கவனத்தை குவிக்க வைக்கும் ஒரு செயலாக அமைந்துவிடும். இதர விஷயங்களில் நாட்டமோ கவனமோ செல்லாமல் பார்த்துக்கொள்ள இந்த சமூகமும், பள்ளியும் வீடும் பார்த்துக்கொள்ளும். இங்கே இதர விஷயங்கள் என குறிப்பிடப்படுவது – விளையாட்டு, கலை, வாழ்க்கை கல்வி, சமூக பண்புகள் ஆகியவை. ஏற்கனவே தினசரி கூடுதல் வகுப்புகளும் சனி ஞாயிறுகளில் சிறப்பு வகுப்புகள் என நெருக்க ஆரம்பித்துவிட்டனர். தினசரி வகுப்புத்தேர்வுகளையும் வைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

 

பொத்தேர்வுக்கு ஏன் பயப்பட வேண்டும் குழந்தைகள் என்ற வாதத்தை ஓரம் கட்டிவிட்டு அதனை எழுதும் மாணவர்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான சூழல் அமைந்துள்ளதா எனவும் பார்க்க வேண்டும். இன்னும் எத்தனையோ தொடக்கப்பள்ளியில் ஈராசிரியர்கள் மட்டுமே உள்ளார்கள். ஐந்து வகுப்புகளுக்கு இரண்டே இரண்டு ஆசிரியர்கள். இதில் அவர்கள் ஏகப்பட்ட பயிற்சிகளுக்கு செல்ல வேண்டும், தரவுகளை கொடுக்க வேண்டும் என பாதி நேரம் விரயமாகின்றது. குழந்தைகளுடன் செலவிடும் நேரம் மிகவும் குறைவு.

மெல்ல கற்கும் மாணவர்கள் பற்றியும் சிறப்புக்குழந்தைகள் பற்றியும் அக்கரையே இல்லாத முடிவு இவர்களுக்கான கல்வி வரும்காலத்தில் என்னவாகும் என்ற கேள்வியை எழுப்பாமல் இல்லை. அது கேள்வி என்பதைவிட வருத்தம் தான். இடைநிற்றலில் குறியீடு ஆரம்பப்பள்ளிகளில் குறைவாக இருக்கின்றது என்ற பெருமை நிலை படிப்படியாக மாறிவிடும். இந்த பயம் ஐந்தாம் வகுப்பில் அல்ல நான்காம் வகுப்பிலேயே துவங்கிவிடும் எப்படி பத்தாம் வகுப்பிற்கு ஒன்பதாம் வகுப்பிலே துவங்குகின்றதோ அதே போலவே.

 

கூடுதலாக கல்வித்துறையில் இருந்து தேர்வை குறித்து திடீர் திடீர் அறிக்கைகளால் பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் குழப்பி அது நேரிடையாகவே குழந்தைகளை பாதிக்க ஆரம்பித்துவிட்டது.

 

சரி, உண்மையில் மாணவர்களின் திறன்களை அறிந்து ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை அதிகப்படுத்துவது தான் இந்த பொத்தேர்வுகளின் நோக்க எனில் ஏன் மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் இந்த விளக்கு அளிக்க வேண்டும்? இதுவே இந்த தேர்வின் நோக்கின் முரணாக அமைந்துவிடுகின்றது அல்லவா? மூன்று ஆண்டுகளில் பயிற்சி கொடுத்தும் மாணவர்களின் திறன் முன்னேறவில்லையெனில் தண்டிக்கப்படப்போவது ஆசிரியர்களோ,கல்வி அதிகாரிகளோ அல்ல மாறாக ஏதும் அறியாத குழந்தைகள்.

– விழியன்

குழந்தைமையை காவு வாங்கும் பொதுத்தேர்வுகள் – விழியன்

February 6, 2020

குழந்தைமையை காவு வாங்கும் பொதுத்தேர்வுகள் – விழியன்

(தேசத்தின் நம்ப்க்கை பிப்ரவரி 2020 இதழில் வெளியான முழுகட்டுரை)

ஐந்து மற்றும் எட்டாம் பொதுத்தேர்வுகள் குறித்து இன்னும் பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. முக்கியமாக பெற்றோர்கள் மத்தியிலும் ஆசிரிய சமூகம் மத்தியிலும் இதனைப் பற்றிய புரிதலும் பல்வேறு கூறுகள் பற்றியும் இன்னும் நிறைய பேச வேண்டி இருக்கின்றது. வெறும் இன்றைய சூழலை மட்டும் பார்க்காமல் ஒட்டுமொத்த கல்வி நகர்வினை கணக்கில் கொண்டு இந்த பொதுத்தேர்வுகளை அனுகவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொத்தேர்வுகள் யாருக்கு?
இது தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறைக்கு உட்பட்ட எல்லா வகையான பள்ளிகளுக்கு உண்டு. குறிப்பாக சமச்சீர் கல்வி முறைய போதிக்கும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் இதில் அடங்கும். சி.பி.எஸ்.சி மற்றும் ஐ.சி.எஸ். கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு இவை இல்லை.

பொதுத்தேர்வு வைத்தால் தான் பயம் வரும், பசங்க விளையாட்டுத்தனமா இருக்காங்க. எட்டாவதுக்கு வந்தாலும் பெயர் கூட தெரியல, கூட்டல் கழித்தல் கூட வரல?

கற்றல் என்பது ஒரு குழந்தை மகிழ்வாக இருக்கும்போதே நிகழும். நிர்பந்தத்தால் கற்றலை உட்புகுத்த முடியவே முடியாது, மாறாக அது வேறுமாதிரியான விளைவுகளையே விளைவிக்கும். கற்க மறுக்கின்றார்கள் எனில் இன்னும் இனிமையாக மாற்ற மாற்று வழிகளை சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்கள், அவர்களின் கற்றல் வேகம், கற்றல் ஆர்வம் நிச்சயம் வேறுபடும். பொதுவான ஒரு கற்றல் நடையினால் எல்லோரும் கற்பார்கள் என்பதும் சாத்தியமில்லை. தேர்வுகளால் பயம் வந்து வாசிப்போரின் எண்ணிக்க சொற்பமாக இருக்கும் மாறாக விடுபட்டு செல்வோரின் எண்ணிக்கை பெருவாரியாக அமைந்துவிடும்.

குழந்தைகளுக்கு எப்படி பாதிப்பு உண்டாகும், வழக்கம் போல அவர்கள் ஆண்டுத்தேர்வு எழுதுவது போல எழுதினால் என்ன?

குழந்தைகளுக்கு பொதுத்தேர்வே பள்ளி நடத்தும் தேர்வா என்பது நிச்சயம் தெரியாது. அவர்களைப்பொறுத்த வரையில் அது ஒரு தேர்வு அவ்வளவே ஆனால் பெற்றோர்களும், ஆசிரியர்களும் சமூகமும் அவர்களை நெம்பி எடுத்துவிடும். தினமும் மாலையில் சிறப்பு வகுப்புகள், சனி, ஞாயிறுகளில் சிறப்பு வகுப்புகள், வீட்டிலும் “பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு என்ன விளையாட்டு வேண்டி கிடக்கு” என்ற மிரட்டல், சொந்தகளை பார்த்தால் “படிச்சிட்டியா படிச்சிட்டியா” என்று கேள்வி கேட்டே குழந்தைகள் மீது பாரம் சுமத்திவிடுவார்கள். சுமத்திவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும். ஏற்கனவே பள்ளிகளில் இப்படித்தான் நிலைமை இருக்கின்றது.

குழந்தைமையை பலி கொடுக்க துவங்கிவிட்டோம். பன்முக ஆளுமைத்திறனை கொடுக்க மறுக்க ஆரம்பித்துவிட்டோம். இனி நான்காம் வகுப்பில் இருந்தே அனைத்தும் ‘கட்’. விளையாட்டும் இல்லை. மற்ற கலைகளுக்கான வகுப்புகள் இல்லை. பள்ளியில் விளையாட்டு பாடவேளை இல்லை. நூலகத்திற்கு இல்லை. ஆண்டுவிழாக்களிலும் பள்ளி விழாக்களிலும் ஒருங்கிணைப்பில் பங்கு இல்லை. வீடுகளில் நடக்கும் விசேஷங்களில் பங்கெடுக்க வாய்ப்புகள் குறைந்துவிடும். முழு நேரமும் படி படி படி. பெற்றோர்கள் புரிதலுடன் இருந்தாலும் இந்த Peer Pressure குழந்தைகளை கொன்று விடும். பள்ளிகளுக்கும் தங்களுடைய திறனை காட்டியாகவேண்டும் என தீவிரமான பயிற்சிகளில் இறங்கும். அதிக வகுப்பு தேர்வுகளை நடத்தி குழந்தைகளின் கைகளை உடைக்கும்.

சமூகத்திலும் மிகப்பெரிய சிக்கலை உருவாக்கும். குறிப்பாக பெண் குழந்தைகள் பள்ளியில் இருந்து அதிகம் விடுபடுவார்கள். நலிந்தவர்களின் குழந்தைகள் நிச்சயம் இடைநின்று தத்தமது பெற்றோர்களின் தொழில்களில் ஈடுபடுவார்கள். பள்ளியை விட்டு ஓடி குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பார்கள். இது சாதாரண குழந்தைகளுக்கே பாரம் எனில் சிறப்பு குழந்தைகளுக்கும் குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்டெடுத்து பள்ளிகளில் காலெடுத்து வைத்துள்ள குழந்தைகளுக்கும் எவ்வளவு பெரிய பாரமாக இருக்கும். எப்படியேனும் பத்தாம் வகுப்பு வரையில் குழந்தை படித்திடுவான், தட்டுத்தடுமாறி கரையேற்றிவிடலாம் என எண்ணில் இருக்கும் பெற்றோர்களின் மனங்களில் இனி மண் தன்.

இப்படி நியாயமற்ற, குழந்தைமையின் மீது நடக்கும் வன்முறை செயலுக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். பெற்றோர்களை ஒருங்கிணைப்பதில் சிக்கல் உள்ளது, ஆசிரியர்கள் எளிதாக குரல் கொடுக்கலாம், அரசியல் கட்சிகளும், குழந்தைகள் மீது அக்கரை உள்ள அத்தனை நபர்களும் கொஞ்சம் மெளனம் கலைக்க வேண்டியுள்ளது.

– விழியன்

Children’s Magazines in Tamil (as of Sept 2019)

September 7, 2019

Children’s Magazines in Tamil (as of Sept 2019)

இன்றைய பெரும்பாலான வாசகர்களும் எழுத்தாளர்களும் சிறுவர்கள் இதழ்கள் வழியே தான் வாசிப்பினை துவங்கினர். தற்சமயம் (பிப்ரவரி 2018) வந்துகொண்டிருக்கும் இதழ்களின் தொகுப்பு. உங்கள் குழந்தைகளுக்கு/மாணவர்களுக்கு இயன்ற அளவு இந்த இதழ்களை அறிமுக செய்யுங்கள்.

தமிழில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான இதழ்கள் & விவரங்கள்

1. துளிர் – சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ்
Contact 044 28113630, MJP – 99943 68501

2. பட்டம் – (மாணவர்களுக்கான இதழ்) தினமலர்
http://www.dinamalar.com/supply.asp?ncat=1360

3. சிறுவர் மலர் – தினமலர் – பிரதி வெள்ளி

4. பெரியார் பிஞ்சு – மாத இதழ் – விடுதலை
To subscribe – http://www.periyarpinju.com/new/

5. தங்கமலர் – தினத்தந்தியின் வாராந்திர இணைப்பு இதழ் –

6. சிறுவர்மணி – தினமணி – வாராந்திர இணைப்பு இதழ்

7. மாயாபஜார் – தி இந்து – பிரதி புதன்

8. குட்டி ஆகாயம் – காலாண்டிதழ்
தொடர்புக்கு – வெங்கட் +919843472092

9. தும்பி
தொடர்புக்கு-9843870059

10. பஞ்சுமிட்டாய். (காலாண்டிதழ்)
தொடர்புக்கு – பிரபு- 97317 36363

11. றெக்கை – சிறுவர் மாத இதழ்
தொடர்புக்கு – 9884208075

12. பொம்மி – சிறுவர் மாத இதழ்

(தொகுப்பு – விழியன்)