கொஞ்சம் மெளனம் கலையுங்கள் – விழியன்
கொஞ்சம் மெளனம் கலையுங்கள்
நேரடியாக மாணவர்களிடம் கேட்டிருக்கேன். கடிதம் எழுதி இருக்கின்றார்கள். கடிதங்களை வாசித்து கதறி அழுதிருக்கின்றேன். “சார், ஸ்கூல்ல விட்றதே இருட்டுற நேரம் அப்புறமும் போய் வீட்ல உக்காந்து ஹோம் வர்க் கொடுப்பாங்க” “அண்ணா, ஞாயித்து கிழமையாச்சும் கலர் டிரஸ் போட்டுவர பர்மிஷன் வாங்கித்தாங்க அண்ணா” “சார், அடிங்க ஆனா பொம்பள புள்ளங்க முன்னாடி எதுக்கு அடிக்கிறாங்க” “கடைசி எக்ஸாம் கூட எழுதிக்கிறேன் சார், க்ளாஸ் டெஸ்ட் எழுத ஏதாச்சும் மெஷின் இருக்கா சொல்லுங்க” கிராமத்தில் வசதி வாய்ப்புகளே குறைவாக இருக்கும் மூன்று நான்கு அரசுப்பள்ளிகளுக்கு சென்று அவர்களிடம் நெருக்கமாக பேசிப்பாருங்க (அதிகாரி தோரணையில் இல்லாமல் ஒரு அண்ணன், அக்காள் தோரணையில்) அவர்களுக்கு எவ்வளவு மறுக்கப்பட்டிருக்கு என்பது விளங்கும். இனி எவ்வளவு மறுக்கப்பட இருக்கு என்பது புரியும். மேலே சொன்னவை யாவும் பத்தாம் வகுப்பு குழந்தைகள் சொன்னவையே. இது எட்டாம் மற்றும் ஐந்தாம் வகுப்பிற்கு பரவிக்கொண்டிருக்கின்றது. குழந்தைகள் மீது அக்கரை கொண்ட அத்தனை பேரும் கொஞ்சம் மெளனம் கலையுங்கள்
– விழியன்