கிளி கத
நேற்றைய கிளி கதை
”அப்பா கிளி கதை சொல்லுங்க.”
“அப்பா ஒரு நாள் வேகமா வண்டி ஓட்டிக்கொண்டு போனேனா, அப்ப வண்டி முன்னாடி ஒரு கிளி வந்துச்சு. பச்சை கலர்ல இருந்து. மூக்கு சிகப்பு கலர்ல இருந்துச்சு. “ஏ கிளி என்ன வேணும்னு” அப்பா கேட்டேன்.
“அங்கிள் நீங்க குழலி அப்பா தானா”ன்னு கேட்டுச்சு. ஆமான்னு தலை ஆட்டினேன்.
“குழலி அக்கா பாதி சாப்பிட்டு போட்ட பழத்தை காக்கா எடுத்துட்டு வந்துச்சு. என்னை கூண்டுல அடைச்சி வெச்சிருந்தாங்க. எனக்கு ரொம்ப பசிச்சுது. காக்கா காக்கா எனக்கு பசிக்குது பழம் தாங்கன்னு கேட்டேன். காக்கா வாயில இருந்த பழத்தை கொடுத்துச்சு. அப்புறம் நான் பழம் சாப்பிட்டேன். பழம் டேஸ்டா இருக்கே யாரு கொடுத்தாங்கன்னு கேட்டேன். காக்கா சொல்லுச்சு குழலி அக்கா சாப்பிட்டு எனக்கு பாதி பழம் கொடுத்தாங்க அந்த பழம் தான் இதுன்னு சொல்லுச்சு. அதனால் தான் டேஸ்டா இருக்கும்னு காக்கா சொல்லுச்சு”
“என்னை கூண்டில இருந்து விட்டுட்டாங்க. குழலி அக்காவை தேடினேன். குழலி அக்கா எங்க”ன்னு கேட்டுச்சு
அவங்க ஆரணி போயிருக்காங்கன்னு சொன்னேன்.
கிளி சொல்லுச்சு “மறக்காம அக்காகிட்ட சொல்லிடுங்கன்னு ” சொல்லி பறக்க ஆரம்பிச்சுது
”என்ன சொல்ல சொல்லுச்சு.” – குழலி
நன்றி சொல்ல சொல்லுச்சு..
அப்பா கிளி கதை சொல்லுங்க..
“அப்பா ஒரு நாள் வேகமா வண்டி ஓட்டிக்…..
– விழியன்
ம்ம்ம் அப்புறம்? 🙂
🙂 🙂 🙂 😀 😀 😀